Just In
- 3 hrs ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- 8 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 9 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 10 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
Don't Miss!
- News ஆனானப்பட்ட துபாயில்.. அவ்வளவு காசு இருந்தும்.. ஊருக்குள் தண்ணீர் தேங்குவது ஏன்? இதுதான் காரணம்
- Sports KKR vs RR : தோனியை அப்படியே பின்பற்றினேன்.. என் ஆட்டத்திற்கு காரணம் அவர் தான்.. பட்லர் நெகிழ்ச்சி!
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஜனாதிபதி பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு..! எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!
மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டு ஜனாதிபதி, மஹிந்திராவின் எந்த தயாரிப்பு பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இந்தியாவின் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமாக பீஜோ நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், நான்கு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
குறிப்பாக முச்சக்கர வாகனத்தை தயாரிப்பதில் இந்நிறுவனம் பெயர்போன ஒன்றாக இருக்கிறது. எனவேதான் பீஜோ தயாரிப்பில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிரபல மெட்ரோபாலிஸ் முச்சர வாகனத்தை பிரான்ஸ் நாடு, அதன் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
மெட்ரோபாலிஸ் ஓர் மூன்று சக்கரங்களைக் கொண்ட ஸ்கூட்டராகும். இந்த வாகனத்தையே ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரான்ஸ் அரசு வாங்கி குவித்துள்ளது. மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரை பீஜோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பிரான்சில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இம்மாதிரியான மூன்று சக்கர வாகன அமைப்பில் பீஜோ அறிமுகப்படுத்துவது இது இரண்டாவது மாடலாகும். முன்னதாக இ-லூதிக்ஸ் எனும் மாடலை அது களமிறக்கியிருந்தது. இது, ஓர் மின்சார ஸ்கூட்டராகும். இதனையும் பிரான்ஸ் அரசு குடியரசு தலைவரின் பாதுகாப்பு பணியில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகின்றது.
இந்த நிலையிலேயே புதிய தயாரிப்பான மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரையும் பிரான்ஸ் அரசு தனது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பில் சேர்ப்பதற்காக களமிறக்கியிருக்கின்றது. பீஜோ பிரான்ஸை மையமாகக் கொண்டு இயங்கினாலும், அது தற்போது இந்திய தயாரிப்பாக மாறியிருக்கின்றது. உரிமையாளராக மஹிந்திரா குழுமம் மாறியதை அடுத்து இந்த அந்தஸ்தை அது பெற்றிருக்கின்றது. எனவேதான் இந்த நிகழ்வை இந்தியா தற்போது கொண்டாடி வருகின்றது.
இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக, "நாங்கள் நல்ல நிறுவனத்தின் வாயிலாக மிக சுமூகமாக நகர தொடங்கியுள்ளோம். "பீஜோ மோட்டார்சைக்கிள்" ஓர் @MahindraRise நிறுவனத்தின் தயாரிப்பு" என அவர் பெருமிதம் கொண்டார்.
மஹிந்திரா குழுமத்தின் சர்வதேச செயல்பாட்டு நிர்வாகியாக பிரகாஷ் வகங்கர் செயல்பட்டு வருகின்றார். இவரும், தனது டுவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திராவின் கூற்றையே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பீஜோ மெட்ரோபாலிஸ் 2020 குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணிக்காக எலிசி அரண்மனை முன்பு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரான்ஸ் அரசு மெட்ரோபாலிஸ் முச்சக்கர வாகனத்தை பாதுகாப்பு பணிக்காக களமிறக்கியதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அதன் முச்சக்கர வாகன அமைப்பே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த வாகனத்தை சென்டர் அல்லது பக்கவாட்டு ஸ்டாண்ட்டுகளைப் பயன்படுத்தாமலே தன்னிச்சையாக நிறுத்த முடியும். மேலும், ஓட்டுநர் திடீரென எழுந்து நின்றாலும் இந்த ஸ்கூட்டர் எந்தவொரு சிக்கலைச் சந்திக்காமல் தொடர்ச்சியாக முன்னேறும்.
எனவே பாதுகாப்பு பணியின் போது திடீர் மோதல்களை போலீஸாரால் எளிதில் கையாள முடியும். குறிப்பாக, மோட்ரோபாலிஸ் நகர்ந்துக் கொண்டிருக்கும்போதே போலீஸாரால் எழுந்து நின்று எதிரிகளைக் கையாள முடியும். எனவேதான் இந்த சிறப்பு திறன் வாய்ந்த மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரை பிரான்ஸ் அரசு அதன் பாதுகாப்பு பணியில் களமிறக்கியிருக்கின்றது.
பாதுகாப்பு படை வீரர்கள் இந்த மோட்டார்சைக்கிளை எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும். இதுபோன்ற சிறப்பு வசதிகளை இந்த முச்சக்கர வாகனம் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே பிரான்ஸ் அரசு மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரைக் களமிறக்கியிருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவானது குவாங்டாங் காவல்துறை வீரர்கள் பயற்சி எடுக்கும்போது எடுக்கப்பட்டதாகும்.
-
இந்த விஷயத்தில் எல்லாரும் டாடா காரை தான் சூஸ் பண்றாங்க!! மஹிந்திரா, ஹூண்டாய் எல்லாம் எங்கேயோ இருக்கு!
-
எல்லாரும் லட்டு கொடுத்து கொண்டாட போறாங்க.. புதிய ஸ்விஃப்ட் மே 2வது வாரத்துக்குள் அறிமுகமாக போகுதா!
-
31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...