Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேடிஎம் 390 பைக் மார்க்கெட்டை குறிவைத்த ஏப்ரிலியா... தரமான சம்பவம் காத்திருக்கு!
இந்தியாவில் 300- 400சிசி இடையிலான ரகத்தில் புத்தம் புதிய பைக் மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக ஏப்ரிலியா தெரிவித்துள்ளது. இந்தியர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டி இருக்கும் இந்த புதிய பைக் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
இத்தாலியை சேர்ந்த பியாஜியோ வாகன குழுத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏப்ரிலியா நிறுவனம் இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட்டில் உள்ள வர்த்தக வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பில் உள்ளது. பிரிமீயம் ஸ்கூட்டர் மாடல்கள் மற்றும் சூப்பர் பைக் மாடல்களுடன் இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் ஏப்ரிலியா அடுத்து வர்த்தக வளம் உள்ள சந்தைகளிலும் புதிய மாடல்களை களமிறக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, கேடிஎம் நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் உள்ள 300- 400சிசி இடையிலான ரகத்தில் புத்தம் புதிய பைக் மாடலை களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் அறிமுக நிகழ்வின்போது, இந்த தகவலை பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டியாகோ கிராஃபி உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த புதிய பைக் மாடலானது ஏப்ரிலியா இந்திய பிரிவு எஞ்சினியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி, இத்தாலியில் வடிவமைக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.
அதேநேரத்தில், இந்த புதிய பைக் மாடலானது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்பதுதான் ஆகச்சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவிலிருந்து புதிய ஏப்ரிலியா பைக்கை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பியாஜியோ திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய பைக் மாடல் குறித்த அதிகத் தகவல்களை கிராஃபி வெளியிடவில்லை. ஆனால், இதற்கான பணிகளில் பியாஜியோ குழுமம் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.
கேடிஎம் பாணியில் இந்த ஒரே சேஸீ, எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இரண்டு வகை பைக் மாடல்களாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஃபேரிங் பேனல் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக மாடலாகவும், நேக்கட் வகை தோற்றத்துடன் கூடிய மற்றொரு ரக மாடலாகவும் அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த ரகத்தில் கேடிஎம் 390 ட்யூக், ஆர்சி 390, ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மற்றும் க்ரூஸர் பைக் மாடல்களை எதிர்த்து களம் காண வேண்டும். எனினும், ஏப்ரிலியா பைக் மாடலை அதிக பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்துவதற்கும் பியாஜியோ வசம் திட்டம் உள்ளதாக தெரிகிறது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!