Just In
- 43 min ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 1 hr ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 3 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 8 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
Don't Miss!
- News உ.பி. நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி.. சிறையில் விஷம் கொடுத்ததால் மாரடைப்பா? வெடிக்கும் சர்ச்சை!
- Movies Aadujeevitham Day 1 collection: ஒரு சராசரி மனிதனின் உண்மைக்கதை.. ஆடுஜீவிதம் முதல் நாள் வசூல்!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புதுமணம் முடித்த கையோடு பைக்கில் புறப்பட்ட இளம் ஜோடி.. நடு வழியில் காத்திருந்து ஷாக் கொடுத்த போலீஸ்!
பைக்கில் வந்த புதுமண தம்பதிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் பஞ்சாப் மாநில போலீஸார் நடந்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் நிலவி வரும் ஊரடங்கு உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கைய கடுமையாக மாற்றியமைத்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், முடக்க நிலை காரணமாக மக்கள் இதுவரை சந்தித்திராத அசௌகரியங்களை தற்போது அனுபவித்து வருகின்றனர்.
சமூக தொற்று ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவு வருகின்ற 3ம் தேதி வரை கட்டாயம் நிலுவையில் இருக்கும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
ஆனால், வைரஸ் பரவும் வேகத்தை வைத்து பார்க்கையில் அரசின் இந்த நிலை எப்போது வேண்டுமானால் மாற்றப்படலாம் என தெரிகின்றது.
அதாவது, 2.0 வெர்ஷனில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு, அடுத்த வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.
வைரஸ் தொற்றால் மக்கள் அவதியடையக் கூடாது என்ற நோக்கத்திலேயே இத்தகைய கடுமையான யுக்தியை அரசுகள் கையாண்டு வருகின்றன.
இதனால், மக்களின் நடைமுறை வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, சமூக இடைவெளியை வலியுறுத்தி அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் திருமணங்கள் போன்ற சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே, ஒரு சிலர் ஆன்லைன் மூலம் திருமணம் செய்துகொள்கின்றனர். பலர் எளிய முறையில் கோயில்களில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
மக்களின் இந்த நிலைக்கு அதிகப்படியானோர் ஒரே இடத்தில் கூடக்கூடாது என அரசு தடை விதித்ததே காரணம். எனவே, குடும்பத்தில் மிக முக்கியமான சிலரை மட்டுமே வைத்து எளிய திருமணங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கோவிலில் மிக எளியமுறையில் திருமணம் முடித்த இளம் ஜோடிகள், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது புல்லட் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், புதுமண தம்பதியர்களை மடக்கி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் எளிய முறையில் திருமணம் வீடு திரும்புவதாக தெரிவித்ததன் அடிப்படையில், அவர்கள் முன்னேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்டதன் காரணத்தால், புதுமண ஜோடிகளுக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
பொதுவாக, தற்போது ஊரடங்கு உத்தரவு நீடித்து வருவதால் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்களுக்கு போலீஸர் சிறப்பு ட்ரீட்மெண்ட் (தண்டனை) வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், எளிய முறையில் திருமணம் முடித்து ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கில் வந்த ஜோடிக்களுக்கு போலீஸார் வாழ்த்து தெரிவித்திருப்பது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விநோத நிகழ்வு பஞ்சாப் மாநிலம், நகா (Naka) என்னும் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் சிம்பிளாக செய்யப்பட்ட திருமணத்தை காட்சிப்பதிவு செய்த ஃபோட்டோகிராஃபர்கள், இளம் தம்பதியனர்கள் பைக்கில் பயணிதவாறு வீடு திரும்பியதையும் காட்சிப்பதிவு செய்தனர்.
அவ்வாறு காட்சிப் பதிவு செய்தபோதே போலீஸார் வாழ்த்துத் தெரிவித்த சம்பவத்தையும் அவர்கள் பதிவு செய்து, தற்போது வெளியிட்டுள்ளனர். போலீஸார் வாழ்த்துத் தெரிவித்ததுடன் இளம் தம்பதியினருக்கு மலர் கொடுப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றது.
இவர்களின் திருமணத்தில் ஒட்டுமொத்தமாகவே 10-க்கும் குறைவானவர்களே பங்கேற்றதாக கூறப்படுகின்றது. அதில், உறவினர்கள் 5 மட்டுமே ஆவர். இதுமாதிரியான எளிய திருமணங்கள்தான் சமீபகாலமாக (கொரோனாவிற்கு பின்) இந்தியாவில் நடைபெற்று வருகின்றது.
ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்று மிக எளிமையான திருமணம் நடைபெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது வட இந்தியர்களின் திருமணம் ஆட்டம், பாட்டத்துடன் மிகக் கொண்டமாக இருப்பது வழக்கம். இவர்களைக் காட்டிலும் பஞ்சாப் மாநிலத்தவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
இதற்கு மாறாக இளைஞர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றிருக்கின்றது. இது தற்போது வீணாக வெளியேச் சுற்றி வரும் இளைஞர்களுக்கு ஓர் சிறந்த முன்னுதாரணமாக இருக்கின்றது.
இந்த சம்பவத்தில் நாம் மிகவும் கவனிக்க வேண்டிய தகவல் சில உள்ளன. அதில், முக்கியமான ஒன்று திருமணம் அதிகாரிகளின் முழு அனுமதியுடன் நடைபெற்றிருப்பது.
கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், ஒரு சிலர் ஜாலியாக வெளியே வந்த வண்ணம் இருக்கின்றனர். இதற்காக கடுமையான தண்டனைகளையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!