Just In
- 1 hr ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 2 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 3 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 4 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Movies கமலுக்கான ஆதரவா?.. திடீரென உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா குமார்!
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மும்பை இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறிய சென்னை தயாரிப்பு! ஆச்சரியத்தில் மூழ்கிய டூ-வீலர் சந்தை
சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வட மாநிலத்தின் குறிப்பிட்ட நகரத்தில் அமோகமான டிமாண்ட் நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியர்களின் மனம் கவர்ந்த இருசக்கர வாகனங்களாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட நகர வாசிகளை மட்டும் சற்று கூடுதலாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் கவர்ந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமாங்க, இந்தியாவின் மும்பை நகரத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டோர்சைக்கள் மிக அதிகளவில் விற்பனையாகிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் ராயல் என்பீல்டு பைக்குகள் அமோகமாக விற்பனையாகியிருக்கின்றன. குறிப்பாக, தசேரா பண்டிகையை முன்னிட்டு இதுவரை 1,200க்கும் அதிகமான ராயல் என்பீல்டு பைக்குகள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக உறுதி வாய்ந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுமட்டுமின்றி, ஒரே நாளில் 3,700 யூனிட் ராயல் என்பீல்டு பைக்குகளே அம்மாநிலம் (மஹாராஷ்டிரம்) முழுவதிலும் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுவும், தசேரா பண்டிகையை முன்னிட்டே டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், நாட்டிலேயே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் அதிகம் விற்பனையாகும் நகரமாக மஹாராஷ்டிராவின் மும்பை நகரம் உருவெடுத்துள்ளது.
இதில், அதிகபட்சம் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களே அதிகம் டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, புல்லட் 350 மாடலும், ஹிமாலயன் மாடல்களும் அடுத்தடுத்த விற்பனை இடத்தைப் பிடித்திருக்கின்றன. தொடர்ந்து, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றான 650 ட்வின் பைக்குகளும் அதிகளவில் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 92 விற்பனையகங்களை ராயல் என்பீல்டு இயக்கி வருகின்றது. இவற்றின் வாயிலாகவே இந்திய இருசக்கர வாகனச் சந்தையே பொறாமைக் கொள்ளும் வகையில் தசேரா பண்டிகையை முன்னிட்டு இருசக்கர வாகனங்களை ராயல் என்பீல்டு டெலிவரி கொடுத்திருக்கின்றது.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வாகன சந்தையுமே மிகப்பெரிய இன்னலில் சிக்கி தவித்தது. குறிப்பாக, பொதுமுடக்கம் மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நாட்களில் ஒரு யூனிட் வாகனங்கள்கூட விற்பனையாகாத நிலையே காட்சியளித்தது. இந்த நிலையில், தசேரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் விற்பனை மந்த நிலையில் லேசான விடுதலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன் விளைவாக ராயல் என்பீல்டு நல்ல விற்பனை வளர்ச்சியை மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவல் பயத்தைப் போக்கும் வகையில் டிஜிட்டல் வர்த்தகத்தை (ஆன்லைன் வர்த்தகம்) ஊக்குவித்தது, நேரடி தொடர்பில்லா விற்பனை, சர்வீஸ் ஆன் வீல்ஸ் (வீட்டுக்கே வந்து பைக்கை சர்வீஸ் செய்யும் வசதி), ஆன்லைன் பண பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளைத் தொடங்கியது.
இதுவும் மக்கள் மத்தியில் ராயல் என்பீல்டு தயாரிப்புகள் நல்ல வரவேற்பைப் பெற காரணமாக அமைந்திருக்கின்றது. இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவையை வழங்கும் விதமாக சுமார் 800-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை சர்வீஸ் ஆன் வீல்களாக ராயல் என்பீல்டு பயன்படுத்தி வருகின்றது. பான் இந்தியா திட்டத்தின்கீழ் இதனை அந்நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.
இதில், மஹாராஷ்டிராவில் மட்டுமே 262 சர்வீஸ் ஆன் வீல் பைக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மஹாராஷ்டிரா மீதான ராயல் என்ஃபீல்டின் இந்த சிறப்பு கவனமே மும்பை வாசிகளை இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகளவில் கவர்ந்துள்ளன.
ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் மீட்டீயோர் எனும் மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் நவம்பர் மாதம் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலை ரீபிளேஸ் செய்யும் விதமாக இது களமிறங்க இருக்கின்றது.
ரூ. 1.60 லட்சத்தில் இருந்து ரூ. 1.80 லட்சம் வரையிலான விலையில் இது எதிர்பார்க்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் இந்தியாவில் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் ஹோண்டா ஹைனஸ் சிபி350 பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் அமர இருக்கின்றது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல பைக்கான கிளாசிக் 350-க்குமே போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!