Just In
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 2 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 4 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 5 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் மலையாளிகள்... ஓ இதுதான் காரணமா..!
கேரளாவில் ஒரே நாளில் 1000 மோட்டார்சைக்கிள்களை டெலிவிரி செய்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியில் இருந்து கேரளாவில் ஓணம் பண்டிக்கை கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறவுள்ள இந்த விழா, கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவுகளினால் கடந்த ஆண்டுகளை போல் விமர்சையாக கொண்டாடப்படவில்லை.
வழக்கமாக ஓணம் பண்டிக்கை நாளில் தான் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்க மலையாளிகள் விரும்புவர். இதனால் இந்த இந்த சமயத்தில் தான் தயாரிப்பு நிறுவனங்களும் கேரளாவில் போட்டி கொண்டு விற்பனை மாடல்களை விற்பனை செய்யும்.
இந்த வகையில் தான் தற்போது இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு தனது டீலர்ஷிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் ஒரே நாளில் 1000 ராயல் என்பீல்டு பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.
இந்த 1000 பைக்குகளில் பிரபலமான கிளாசிக் 350, புல்லட் 350, ஹிமாலயன் மட்டுமில்லாமல் 650 ட்வின் பைக்குகளும் அடங்குகின்றன. டெலிவிரி பணிகள் முடுக்கிவிட்டது மட்டுமில்லாமல் நாடு முழுவதும் விற்பனை செய்துவரும் தனது தயாரிப்புகளில் அப்டேட்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் கொண்டுவருகிறது.
இந்த வகையில் இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்கில் பிஎஸ்6 அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கிளாசிக் 350-க்கு மாற்று பைக் மாடலும் வடிவமைப்பு பணியில் உள்ளது. புதிய அறிமுகங்களாக மீட்டியோர் 350, ஹண்டர், ஷெர்பா மற்றும் புதிய 650சிசி பைக்குகள் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து எதிர்காலத்தில் வெளிவரவுள்ளன.
இவற்றில் முதல் பைக்காக இந்த செப்டம்பர் மாதத்தில் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்ற மூன்று வேரியண்ட்களில் மீட்டியோர் 350 அறிமுகமாகவுள்ளது. இந்நிறுவனம் சிறிய பிஎஸ்6 பைக்குகளுக்கு ஜே ப்ளாட்ஃபாரத்தையும், பெரிய 650சிசி பைக்குகளுக்கு பி ப்ளாட்ஃபாரத்தையும் நம்பியிருக்கிறது.
புதிய அறிமுகங்களுக்கு இடையில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் இருந்த 500சிசி பைக்குகளின் தயாரிப்பை ஒவ்வொன்றாக நிறுத்தி வருகிறது. இந்த வகையில் நிறுத்தப்பட்ட கிளாசிக் 500 பைக்கிற்கு பெருமையளிக்கும் விதமாக அதன் கருப்பு எடிசனின் 1000 மாதிரிகள் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.