Just In
- 17 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 40 min ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
Don't Miss!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குறிப்பிட்ட பைக் மாடலின் விலையை திடீரென உயர்த்திய சுசுகி! எந்த மாடலின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு?
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் குறிப்பிட்ட மாடலின் விலையை திடீரென உயர்த்தி அறிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டை தலைமையமாகக் கொண்டு இயங்கும் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் ஸ்கூட்டர் மற்றும் பைக் ஆகிய இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில், இந்நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதன் பிரபல ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்தி அறிவித்தது. இது வருடத்திற்கு ஒரு முறை வழக்கமாக செய்யப்படும் விலையுயர்வுதான் என கூறப்பட்டது.
அதேசமயம், பிஎஸ்-6 தர உயர்விற்கும் கடந்த காலங்களில் சுசுகி அதன் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்நிலையில், சுசுகி நிறுவனம் மீண்டும் அதன் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், இம்முறை பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகின்றது.
அதாவது, சுசுகி ஜிக்ஸெர் வரிசையில் விற்பனைச் செய்யப்பட்டு வரும் மோட்டார்சைக்கிள்களுக்குதான் தற்போது விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.
சுசுகி நிறுவனம் ஜிக்ஸெர் வரிசையில் ஜிக்ஸெர் (வழக்கமான ஆரம்பநிலை மாடல்), ஜிக்ஸெர் எஸ்எஃப், ஜிக்ஸெர் எஸ்எஃப் மோட்டோ ஜிபி எடிசன் ஆகிய மூன்று மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இந்த மாடல்களின் விலைதான் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஜிக்ஸெர் மாடலுக்கு ரூ. 2,040-ம், ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலுக்கு ரூ. 2,041-ம், ஜிக்ஸெர் எஸ்எஃப் மோட்டோ ஜிபி எடிசனுக்கு ரூ. 2,070 என்ற விலையுயர்வும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையுயர்வால் சுசுகி ஜிக்ஸெர் வரிசையில் இருக்கும் பைக்குகள் சற்று காஸ்ட்லியான மாடல்களாக மாறியிருக்கின்றன.
சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளாக ஜிக்ஸெர் மாடல் பைக்குகளே இருக்கின்றன. இவை, தற்போது ரூ. 1,13,941 முதல் ரூ. 1,24,970 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இது பிற ஸ்போர்ட்ஸ் மற்றும் நேக்கட் ரக பைக்குகளைக் காட்டிலும் சற்று குறைந்த விலையாக இருக்கின்றது.
இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 154.9 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினையேப் பயன்படுத்தி வருகின்றது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 13.4 பிஎச்பி பவரையும், 13.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.
எஞ்ஜினைப் போலவே இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் பிற அம்சங்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. அந்தவகையில், பைக்கின் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், ஏழு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பாதுகாப்பு அம்சத்திற்காக பைக்கின் இரு முனைகளுக்கும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், கூடுதல் பாதுகாப்பு அம்சத்திற்காக ட்யூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இது மழை மற்றும் வழு வழுப்பான சாலைகளில் சிறந்த பிரேக்கிங் வசதியை வழங்க உதவும்.
இத்துடன், பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், எல்இடி மின் விளக்குகள் மற்றும் கட்டுமஸ்தான உடல் தோற்றம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
சுசுகி நிறுவனம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கணிசமான விற்பனை இழப்பைச் சந்தித்துள்ளது.
எனவே, கொரோனா காலத்தில் இழந்தவற்றை மீட்டெடுக்கும் சில சிறப்பு திட்டத்தை அது அறிவித்துள்ளது. அதாவது டிஜிட்டல் (ஆன்-லைன்) விற்பனை, பைக்கை டெலிவரி செய்வது, எளிய கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சுசுகி நடைமுறைப்படுத்தி வருகின்றது.
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!