Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டூ வீலர் விற்பனையில் வெற்றி நடைபோடும் சுசுகி.. புதிய இலக்கை எட்டியதால் போட்டி நிறுவனங்கள் வாயடைப்பு!
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் டூ வீலர் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கொரோனா சோதனை காலத்தில் புதிய இலக்கை சுசுகி எட்டியிருப்பது போட்டி நிறுவனங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியர்கள் மத்தியில் கார்களைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களுக்கு எப்போதும் நல்ல மவுசு உண்டு. இதனாலயே, ஒவ்வொரு நிதியாண்டிலும் கார்களின் விற்பனை எண்ணிக்கையைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களின் விற்பனை லட்சக் கணக்கில் காணப்படுகின்றது. ஆனால் இந்நிலையை, உலகையே அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லி வைரஸ் கொரோனா (கோவிட் 19) அப்படியே மாற்றியிருக்கின்றது.
வைரஸ் பரவலின் காரணமாக உலக ஜம்பவான் நிறுவனங்கள்கூட செய்வதறியாமல் திக்குமுக்காடி வருகின்றன. அவை கடந்த காலங்களில் சந்திராத அளவிற்கு விற்பனை வீழ்ச்சியில் சிக்கியிருப்பதே இதற்கு காரணம்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்து விநியோகமும் முழுவதுமாக தடைபட்டுள்ளது.
இதேநிலைதான் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கும் தற்போது நிலவி வருகின்றது. ஏன், நம் நாட்டு வாகன உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ்கூட மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதன் உற்பத்தி மற்றும் விற்பனையின் சதவீதம் முந்தைய காலங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ந்துள்ளது. டாடா நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த சோகமான நிகழ்வு இந்திய வாகனத்துறைக்கே பேரதிற்சியக உள்ளது.
அதேசமயம் ஆச்சரியமளிக்கின்ற வகையில், இந்தியா வாகன சந்தையில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் வழக்கமான காலகட்டத்தில் பெறுவதைப் போன்ற விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. அதிலும், இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் டூ-வீலர் உற்பத்தி நிறுவனங்கள் சில முந்தையக் காலக்கட்டத்தைக் காட்டிலும் கடந்த மார்ச் (2020) மாத விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டி சாதனைப் படைத்திருக்கின்றன.
இந்த புதிய சாதனையை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம்தான் முன்னதாகப் பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த வரிசையில் புதிதாக சுசுகி இருசக்கர வாகன நிறுவனமும் இணைந்திருக்கின்றது.
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இதுபோன்ற வளர்ச்சியைப் பெறுவது முதல் முறையல்ல. இது கடந்த சில மாதங்களாகவே விற்பனை உயர்வை மட்டுமே ந்தித்து வருகின்றது. அதாவது, ஜிக்ஸெர் வரிசையில் புதிய தலைமுறை மாடல்களை அறிமுகம் செய்ததில் இருந்து கணிசமான வளர்ச்சியை அது பெற்று வருகின்றது.
அந்தவகையிலேயே கடந்த 2019 நிதியாண்டு விற்பனையைக் காட்டிலும் நடப்பாண்டின் (2020) நிதியாண்டு விற்பனையில் 5.7 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அதாவது, 2019 மார்ச் மாதம் வரை 7,47,506 யூனிட்டுகளை அந்நிறுவனம் விற்பனைச் செய்தருந்தது. ஆனால், தற்போது 2020 மார்ச் மாத இறுதியில் பார்த்தோமேயானால் அது 7,90,397 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
இந்த அதீத விற்பனை வளர்ச்சிக்கு சுசுகி மோட்டார்சைக்கிள் களமிறக்கிய புத்தம் புதிய ஸ்டைல் கொண்ட புது முக இருசக்கர வாகனங்களே என்று கருதப்படுகின்றது. இதை உறுதிச் செய்கின்ற வகையில் 2020 மார்ச் மாதத்தில் மட்டும் 40,636 டூ வீலர்களை அது விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த விபனையானது வெறும் 22ம் தேதி வரை மட்டுமே செய்யப்பட்டது ஆகும். அதன் பின் கொரோனா காரணமாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சுசுகி மோட்டார்ஸ் சைக்கிள் நிறுவனத்திற்கு கிடைக்கவிருந்த பெரும் வருமானத்தை கொரோனா வைரஸால் வழங்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முழுமையாக தடுத்துள்ளது. இதே நிலையைதான் இந்திய மற்றும் உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களுகும் கொரோனா ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சுசுகி நிறுவனம் எட்டியிருக்கும் புதிய மைல்கல் மற்ற போட்டி நிறுவனங்களுக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், பேரழிவு காலத்தைப் போல் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற வேலையில் சுசுகி நிறுவனத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து. இது ஒரு சில நிறுவனங்களுக்கு பொறாமையை ஏறபடுத்தும் வகையில் உள்ளது.