Just In
- 44 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டூ வீலர் விற்பனையில் வெற்றி நடைபோடும் சுசுகி.. புதிய இலக்கை எட்டியதால் போட்டி நிறுவனங்கள் வாயடைப்பு!
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் டூ வீலர் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கொரோனா சோதனை காலத்தில் புதிய இலக்கை சுசுகி எட்டியிருப்பது போட்டி நிறுவனங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியர்கள் மத்தியில் கார்களைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களுக்கு எப்போதும் நல்ல மவுசு உண்டு. இதனாலயே, ஒவ்வொரு நிதியாண்டிலும் கார்களின் விற்பனை எண்ணிக்கையைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களின் விற்பனை லட்சக் கணக்கில் காணப்படுகின்றது. ஆனால் இந்நிலையை, உலகையே அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லி வைரஸ் கொரோனா (கோவிட் 19) அப்படியே மாற்றியிருக்கின்றது.
வைரஸ் பரவலின் காரணமாக உலக ஜம்பவான் நிறுவனங்கள்கூட செய்வதறியாமல் திக்குமுக்காடி வருகின்றன. அவை கடந்த காலங்களில் சந்திராத அளவிற்கு விற்பனை வீழ்ச்சியில் சிக்கியிருப்பதே இதற்கு காரணம்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்து விநியோகமும் முழுவதுமாக தடைபட்டுள்ளது.
இதேநிலைதான் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கும் தற்போது நிலவி வருகின்றது. ஏன், நம் நாட்டு வாகன உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ்கூட மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதன் உற்பத்தி மற்றும் விற்பனையின் சதவீதம் முந்தைய காலங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ந்துள்ளது. டாடா நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த சோகமான நிகழ்வு இந்திய வாகனத்துறைக்கே பேரதிற்சியக உள்ளது.
அதேசமயம் ஆச்சரியமளிக்கின்ற வகையில், இந்தியா வாகன சந்தையில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் வழக்கமான காலகட்டத்தில் பெறுவதைப் போன்ற விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. அதிலும், இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் டூ-வீலர் உற்பத்தி நிறுவனங்கள் சில முந்தையக் காலக்கட்டத்தைக் காட்டிலும் கடந்த மார்ச் (2020) மாத விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டி சாதனைப் படைத்திருக்கின்றன.
இந்த புதிய சாதனையை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம்தான் முன்னதாகப் பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த வரிசையில் புதிதாக சுசுகி இருசக்கர வாகன நிறுவனமும் இணைந்திருக்கின்றது.
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இதுபோன்ற வளர்ச்சியைப் பெறுவது முதல் முறையல்ல. இது கடந்த சில மாதங்களாகவே விற்பனை உயர்வை மட்டுமே ந்தித்து வருகின்றது. அதாவது, ஜிக்ஸெர் வரிசையில் புதிய தலைமுறை மாடல்களை அறிமுகம் செய்ததில் இருந்து கணிசமான வளர்ச்சியை அது பெற்று வருகின்றது.
அந்தவகையிலேயே கடந்த 2019 நிதியாண்டு விற்பனையைக் காட்டிலும் நடப்பாண்டின் (2020) நிதியாண்டு விற்பனையில் 5.7 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அதாவது, 2019 மார்ச் மாதம் வரை 7,47,506 யூனிட்டுகளை அந்நிறுவனம் விற்பனைச் செய்தருந்தது. ஆனால், தற்போது 2020 மார்ச் மாத இறுதியில் பார்த்தோமேயானால் அது 7,90,397 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
இந்த அதீத விற்பனை வளர்ச்சிக்கு சுசுகி மோட்டார்சைக்கிள் களமிறக்கிய புத்தம் புதிய ஸ்டைல் கொண்ட புது முக இருசக்கர வாகனங்களே என்று கருதப்படுகின்றது. இதை உறுதிச் செய்கின்ற வகையில் 2020 மார்ச் மாதத்தில் மட்டும் 40,636 டூ வீலர்களை அது விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த விபனையானது வெறும் 22ம் தேதி வரை மட்டுமே செய்யப்பட்டது ஆகும். அதன் பின் கொரோனா காரணமாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சுசுகி மோட்டார்ஸ் சைக்கிள் நிறுவனத்திற்கு கிடைக்கவிருந்த பெரும் வருமானத்தை கொரோனா வைரஸால் வழங்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முழுமையாக தடுத்துள்ளது. இதே நிலையைதான் இந்திய மற்றும் உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களுகும் கொரோனா ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சுசுகி நிறுவனம் எட்டியிருக்கும் புதிய மைல்கல் மற்ற போட்டி நிறுவனங்களுக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், பேரழிவு காலத்தைப் போல் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற வேலையில் சுசுகி நிறுவனத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து. இது ஒரு சில நிறுவனங்களுக்கு பொறாமையை ஏறபடுத்தும் வகையில் உள்ளது.
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!