Just In
- 42 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கியது ட்ரையம்ஃப் நிறுவனம்!
வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதமாக, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பைக் விற்பனையை துவங்கி இருக்கிறது ட்ரையம்ஃப் நிறுவனம். பல்வேறு சிறப்பு திட்டங்களுடன் பயன்படுத்தப்பட்ட பைக்குகளை ட்ரையம்ஃப் விற்பனை செய்ய உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் இந்திய பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் அதிக வரவேற்பை பெற்ற பிராண்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகான சூழலில் வாகன சந்தையில் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் புதுமையான பல முயற்சிகளிலும், வர்த்தக மாற்றங்களையும் செய்து வருகின்றன.

அந்த வகையில், ட்ரையம்ஃப் நிறுவனம் இந்தியாவில் தனது பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கான புதிய விற்பனைப் பிரிவை அறிவித்துள்ளது.. ட்ரையம்ஃப் அப்ரூவ்டு என்ற பெயரில் இந்த பிரிவு செயல்பட உள்ளது.

தனது பயன்படுத்தப்பட்ட பிரிமீயம் பைக்குகளை பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, தரம் பரிசோதிக்கப்பட்டு பின்னர் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். மேலும், இந்த பைக்குகளுக்கு வாங்கிய தேதியில் இருந்து ஓர் ஆண்டுக்கான வாரண்டி வழங்கப்பட உள்ளது.

அதேபோன்று, ட்ரையம்ஃப் அப்ரூவ்டு பிரிவு மூலமாக வாங்கப்படும் பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கு ஓர் ஆண்டுக்கு சாலை அவசர உதவி திட்டமும் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பைக்குகளுக்கு அப்ரூவ்டு சான்று, வாகனத்தின் உரிமையாளர், சர்வீஸ் செய்ததற்கான சான்றுகள் மற்றும் மாசு சான்று உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

ட்ரையம்ஃப் அப்ரூவ்டு மூலமாக வாங்கப்படும் பயன்படுத்தப்பட்ட பைக் மாடல்களுக்கு கடன் உதவி திட்டத்தையும் வழங்குவதாக ட்ரையம்ஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட ட்ரையம்ஃப் பைக்குகளை மிகச் சரியான விலையில், அதிக நம்பகத்தன்மையுடன் வாங்குவதற்கான வாய்ப்பை ட்ரையம்ஃப் அப்ரூவ்டு பிரிவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ட்ரையம்ஃப் அப்ரூவ்டு என்ற பிரத்யேக இணையதளத்தையும் ட்ரையம்ஃப் அறிமுகப்படுத்தி உள்ளது.