Just In
- 1 hr ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 2 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 2 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
- 5 hrs ago இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
Don't Miss!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- News 17 தொகுதிகளில் 20% ஓட்டுகளை தாண்டும் பாஜக.. எந்தெந்த இடங்கள் தெரியுமா? தந்தி டிவி கருத்து கணிப்பு
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதி வழங்க உள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குமான பணிகள் தமிழகத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கு பெரிய அளவிலான நிதி ஆதாரம் தேவைப்படும். இதற்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தங்களால் முடிந்த தொகையை வழங்குமாறு தமிழக முதல்வர் பழனிச்சாமி அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் கொரோனா எதிர்ப்பு நிதி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் இருசக்கர வாகன நிறுவனமும் தனது பங்களிப்பாக ரூ.5 கோடியை பொது நிவாரண நிதிக்கு வழங்க இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சார்பில் சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வரும் சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ் மூலமாக இந்த நிதி தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உள்ளடக்கிய டிவிஎஸ் குழுமம் பிரதமரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.25 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மொத்தமாக ரூ.30 கோடியை கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை திட்டங்களுக்காக டிவிஎஸ் வழங்க உள்ளது.
இவை தவிர்த்து, 10 லட்சம் மாஸ்க்குகளை மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க உள்ளதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் உள்ள நகராட்சிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பதற்கான வாகனங்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
ஓசூர் மற்றும் சென்னை பாடியில் உள்ள தனது ஆலைகளின் கேண்டீன் மூலமாக உணவு பாக்கெட்டுகள் தயாரித்து அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை, மருத்துவத் துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு தேவையான கிருமி நாசினி வாகனத்தையும் வழங்கி இருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் மூலமாக பெரிய அளவிலான தனது சமூக நலப் பங்களிப்புகளை இந்த தருணத்தில் டிவிஎஸ் மோட்டார் மற்றும் டிவிஎஸ் குழுமம் வழங்கி இருக்கிறது.
-
இனி இவி பேட்டரிகளை சொந்தமாக வாங்க வேண்டாம்! கம்மி ரேட்ல வாடகைக்கு கிடைக்கப்போகுது!
-
பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
-
வந்தே பாரத் ரயிலில் உணவு இல்லாமல் பட்டினியாக பயணித்த குடும்பம்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?