Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies குழந்தை இருந்தாலும் பரவாயில்லை..மீனாவை திருமணம் செய்ய தயார்.. புயலை கிளப்பிய யூட்யூபர்
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: டிவிஎஸ் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதி வழங்க உள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குமான பணிகள் தமிழகத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கு பெரிய அளவிலான நிதி ஆதாரம் தேவைப்படும். இதற்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தங்களால் முடிந்த தொகையை வழங்குமாறு தமிழக முதல்வர் பழனிச்சாமி அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் கொரோனா எதிர்ப்பு நிதி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் இருசக்கர வாகன நிறுவனமும் தனது பங்களிப்பாக ரூ.5 கோடியை பொது நிவாரண நிதிக்கு வழங்க இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சார்பில் சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வரும் சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ் மூலமாக இந்த நிதி தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உள்ளடக்கிய டிவிஎஸ் குழுமம் பிரதமரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.25 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மொத்தமாக ரூ.30 கோடியை கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை திட்டங்களுக்காக டிவிஎஸ் வழங்க உள்ளது.
இவை தவிர்த்து, 10 லட்சம் மாஸ்க்குகளை மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க உள்ளதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் உள்ள நகராட்சிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பதற்கான வாகனங்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
ஓசூர் மற்றும் சென்னை பாடியில் உள்ள தனது ஆலைகளின் கேண்டீன் மூலமாக உணவு பாக்கெட்டுகள் தயாரித்து அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை, மருத்துவத் துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு தேவையான கிருமி நாசினி வாகனத்தையும் வழங்கி இருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் மூலமாக பெரிய அளவிலான தனது சமூக நலப் பங்களிப்புகளை இந்த தருணத்தில் டிவிஎஸ் மோட்டார் மற்றும் டிவிஎஸ் குழுமம் வழங்கி இருக்கிறது.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!