Just In
- 51 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போலீஸில் உருவாக்கப்பட்ட புதிய பெண்கள் படை... எதற்காக என தெரிந்தால் கண்டிப்பா அசந்து போயிருவீங்க...
காவல் துறையில் முழுக்க முழுக்க பெண்களை கொண்ட புதிய படை உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைல் மாடர்ன் பைக்குகளுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மிக பெரியது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை ராயல் என்பீல்டு நிறுவனம் பெற்றுள்ளது.
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை சொந்தமாக்க வேண்டும் என்ற லட்சியம் பலருக்கும் இருந்து வரும் நிலையில், பெங்களூர் மகளிர் போலீசாருக்கு தற்போது ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ராயல் என்பீல்டு நிறுவனமும், பெங்களூர் போலீசாரும் கை கோர்த்துள்ளனர்.
முழுக்க முழுக்க பெண் போலீசார் மட்டும் அடங்கிய மோட்டார்சைக்கிள் ரைடிங் படையை இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. இந்த படைக்கு ‘We for Women' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக பெங்களூர் நகரை உருவாக்கும் பணிகளை இந்த படை மேற்கொள்ளும்.
இது தொடர்பாக பெங்களூர் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டத்தின் கீழ் தற்போது 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த படையை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடக்கும். இந்த படையில் உள்ள பெண் போலீசார் பெங்களூர் நகரை பாதுகாப்பாக வைத்திருக்கும் பணிகளை செய்வார்கள்.
இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும், மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இருக்கும். இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்ட பயிற்சியானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.
இதில், ராயல் என்பீல்டு ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மற்றும் கிளாசிக் 350 சிக்னல்ஸ் போன்ற மாடல்கள் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பயிற்சியானது கடந்த டிசம்பர் மற்றும் நடப்பு ஜனவரி மாதங்களில் நடைபெற்றது. இதில், பெங்களூர் டிராபிக் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் மோட்டார்சைக்கிளை ஓட்டி பயிற்சி பெற்றனர்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தை சேர்ந்த சிறப்பு குழுவின் மேற்பார்வையில் பெங்களூர் மகளிர் போலீசாருக்கு இந்த பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த சிறப்பு குழுவானது, தொழில்முறை ரைடிங் திறன்களை சொல்லிக்கொடுத்து, பெங்களூர் மகளிர் போலீசாருக்கு உதவி செய்தது.
மோட்டார்சைக்கிள் ரைடிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில், ரைடிங் திறன்களை அதிகப்படுத்தி கொள்வதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பணியில் இருக்கும்போது ஏதேனும் சவாலை சந்திக்க நேரிட்டால், அதனை எப்படி எதிர்கொள்வது? என்ற பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த படையில் உள்ள மகளிர் போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக பெங்களூர் நகரை மாற்றுவதற்கு, ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். பெங்களூர் காவல் துறை மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த முயற்சி, சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடுகளை களைய உதவி செய்யும்.
குறிப்பாக ஆணாதிக்கம் நிறைந்த பகுதிகளில், இந்த சிறப்பு திட்டம் மூலம், பாலின பாகுபாடுகள் களையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க, பெங்களூர் காவல் துறை மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள இந்த திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே.
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!