Just In
- 44 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
கொரோனா வைரஸ் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வேலையில் நமது அண்டை மாநிலமான கேரள அரசு, தனித்துவமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.
உலகம் முழுவதிலும் பரவியுள்ள உயிர்கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவையும் தனது கோரப்பிடியில் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கின்றது. நாள்தோறும் நூற்றுக் கணக்கோரை தொற்றி வரும் இந்த வைரஸ், சிலரை தனது ஆறாத பசிக்கு இரையாக்கியும் வருகின்றது. இதற்கு தினந்தோறும் வைரஸ் தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையே சான்று
இந்த வைரசின் அபாயகரமான பிடியில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவே ஆரம்பத்தில் கடுமையாக பாதித்திருந்தது. இதனால், கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட அம்மாநிலத்தை இறைவன் கை விட்டுவிட்டார் என்று கூறி அண்டை மாநிலங்கள் பரிதாபப்பட்டன. ஆனால், இன்றோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.
கொரோனாவிற்கு எதிரான போரில் முழு வீச்சுடன் களமிறங்கிய அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்தது. அதுமட்டுமின்றி வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த துரிதமான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டது.
இதன் விளைவாக ஆரம்பத்தில் வைரஸ் தொற்றில் முதல்நிலை வகித்து வந்த கேரளா, தற்போது கடைநிலை இடத்திற்கு நகர்ந்துள்ளது.
அதாவது வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் மாநிலங்களில் இம்மாநிலமே தற்போது முன்னணியில் இருக்கின்றது.
கேரளாவின் இந்த நிலைக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. அதேசமயம், மக்களின் ஒத்துழைப்பில்லாமல் கேரளாவால் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் ஓராளவிற்கு நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் வைரசின் தீவிரம் அதிகரித்த நிலையிலேயே உள்ளது.
எனவே, தற்போது குறைந்த எண்ணிக்கையை அப்படியே தக்க வைத்து, படிப்படியாக வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழித்துகட்டுவதற்கான முயற்சிகள் கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக மாநிலத்தின் முக்கிய நகரங்களில் சிறப்பு போலீஸார் படை உருவாக்கப்பட்டு தீவிர கண்கானிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில், கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான திரிசூர் பகுதியில் சிறப்பு பெண்கள் காவலர் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காவலர் படை நகரத்தின் அனைத்து மூலை முடுக்கெல்லாம் அலசி ஆராய்ந்து மக்கள் நடமாட்டத்தை தவிர்க்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, தனித்திருக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த பேரிடர் காலத்தில் உதவி புரிய இருக்கின்றனர்.
இந்த சிறப்பு பெண்கள் படைக்கென ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபலமான புல்லட் பைக்குகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் சிங்கம் படம் சூர்யாவைப் போல் இந்த பைக்கில் புறப்பட்டு சென்றே தனி சிறப்பு வாய்ந்த பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
ஒவ்வொரு பைக்கிலும் இரு பெண் காவலர்கள் பயணிப்பர். அவர்களுக்கு ஒரே மாதிரியான அடையாளம் பொருந்திய ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான முகமூடி மற்றும் கிருமி நாசினியும் அவர்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த 14ம் தேதியோடு முடிவடைய இருந்த தடையுத்தரவு, வருகின்ற மே 3ம் தேதி வரை நீடித்துள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது ஒவ்வொரு மாநில அரசின் தலையாய கடமையாக மாறியுள்ளது. இதனடிப்படையிலேயே கேரளாவில் சிறப்பு பெண்கள் காவலர் படை உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...