Just In
- 1 hr ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 3 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 4 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 6 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்வித்த யமஹா... எப்படி உதவியது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!
கொரோனா வைரசினால் உருவான இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை மகிழ்விக்கின்ற காரியத்தை யமஹா நிறுவனம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றன. இதுமாதிரியான சூழ்நிலையில் அரசுக்கும், துயரத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கும் அரசு அல்லாத தனியார் நிறுவனங்களே அதிகளவில் உதவிகளை செய்து வருகின்றன.
அந்தவகையில், வாகனம் மற்றும் அதைச் சார்ந்து இயங்கி வரும் நிறுவனங்களின் உதவி அளப்பறியாதது. ஆம், வாகன உற்பத்தி நிறுவனங்கள் நிதியுதவி மட்டுமின்றி மருத்துவ உபகரண உதவியையும் வழங்குகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பன்முனை உதவிகளை வாகனங்கள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் அரசுக்கு வழங்கி வருகின்றன.
மேலும், வேலையிழந்த மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக அல்லல்படும் மக்களுக்கு தேவையான உதவிகளையும் அவை செய்து வருகின்றன. இதுமட்டுமின்றி, மருத்துவமனைகள் அல்லாத குக்கிராமங்களில் மருத்துவ கேம்ப்களை அமைத்து பரிசோதனை மற்றும் கொரோனா பற்றிய பிரச்சாரங்களை அவை செய்து வருகின்றன. இத்துடன், சானிட்டைசர் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்டவற்றையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், யமஹா நிறுவனம் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிலவற்றிற்கு உதவும் விதமாக நிதியுதவியை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது வழங்கியிருப்பது சற்று குறைந்த தொகை என கூறப்படுகின்றது. இருப்பினும், அந்நிறுவனம் வழங்கியிருக்கும் நேரமானது மிகவும் இக்கட்டான நிலையாக உள்ளது.
அதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் அனைத்துத் துறையும் தற்போதுதான் லேசான இயக்கத்தைப் பெற தொடங்கியிருக்கின்றன. முன்னதாக 60 நாட்களுக்கும் அதிகமாக இயக்கமற்ற நிலையிலேயே அவை இருந்தன. இதனால், ஏற்றுமதி, இறக்குமதி என எதையும் செய்ய முடியாத நிலைக்கு அனைத்துத்துறையும் தள்ளப்பட்டன. இதேபோன்று, உற்பத்தி மற்றும் விற்பனையைிலும் மிக மிக கடுமையாக சரிவே நீடிக்கின்றது.
குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ஒரு யூனிட் வாகனத்தைக்கூட விற்க முடியாமல் வாகன நிறுவனங்கள் கடந்த காலங்களில் திணறின. இதனால், பல நிறுவனங்களின் வருமானம் பூஜ்ஜியம் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையிலும் ஒரு சில நிறுவனங்கள் நன்றி கடனை தீர்க்கும் விதமாக நிதியுதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செய்தன. சிறந்த உதாரணம் டாடா நிறுவனம், இது சுமார் 1,500 கோடி டாடா குழுமத்தின் வாயிலாக வழங்கியது.
அந்தவகையில்தான் தற்போது யமஹா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ரூ. 61.5 லட்சத்தை கொரோனா நிதியுதவியாக வழங்கியுள்ளது. இதில், ரூ. 25 லட்சம் தமிழகத்திற்கும், மற்றொரு 25 லட்ச ரூபாய் உத்தரப்பிரதேச அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ரூ. 11.5 லட்சத்தை பிரதம மந்திரி நிதி திட்டத்திற்கு வழங்கியிருக்கின்றது, யமஹா.
உபி மற்றும் தமிழகத்தில் யமஹா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குவது குறிப்பிடத்தகுந்தது. இதன்காரணத்தினாலயே தனித்துவமாக இவ்விரு மாநிலங்களுக்கும் மட்டும் யமஹா நிதியுதவி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது நாட்டில் மூன்றாவது ஆலையாக ஹரியானாவில் தொழிற்சாலையை தொடங்குவதற்கான பணிகளை யமஹா மேற்கொண்டு வருகின்றது.
எனவே, விரைவில் அங்கிருந்தும் யமஹா இருசக்கர வாகனங்கள் உற்பத்திச் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் நிதியுதவியானது, யமஹா அதன் நிறுவன ஊழியர்களிடம் இருந்து நன்கொடையாக வசூலித்த தொகை என கூறப்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்கள் மட்டுமின்றி தற்காலிக பணியாளர்கள் சிலரிடம் இருந்தும் இந்த நன்கொடையை அது வசூலித்து வழங்கியுள்ளது.
யமஹா நிறுவனத்தில் சர்வீஸ் மற்றும் பணியிடத்தைப் பொருத்து வெள்ளைக் காலர் மற்றும் நீல காலர் என பிரிக்கப்படுகின்றது. இவர்களிடத்தில் இருந்துதான் சிறிய சிறிய தொகையாகப் பெற்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு யமஹா நிதியுதவி செய்துள்ளது.
யமஹா நிறுவனம், தற்போது அதன் பிரபல தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் பணியில் மும்பரம் காட்டி வருகின்றது. இதுமட்டுமின்றி, விற்பனை மற்றும் வருமானத்தை ஈட்டும் முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்-6 தர ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 எஃப்ஐ ஆகிய மாடல் ஸ்கூட்டர்களின் விலையை அது கணிசமாக உயர்த்தியது.
அதாவது, ரூ. 800 என்ற விலையை அனைத்து வேரியண்டுகளுக்கும் உயர்த்தியது. இதனால், ரூ. 66,730க்கு விற்கப்பட்டு வந்த ரே இசட்ஆர் 125 எஃப்ஐ டிரம் மாடல் ரூ. 67,530க்கு உயர்ந்தது. இதேபோன்று, மற்ற வேரியண்டுகளும் அதன் விலையில் ரூ. 800 உயர்வைப் பெற்று காஸ்ட்லியான ஸ்கூட்டர்களாக மாறியுள்ளன.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!