Just In
- 58 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
அண்ணா சாலை அடுத்து அசோக் நகர்.. சென்னையை நோக்கி படையெடுக்கும் யமஹா ப்ளூ ஸ்கொயர் பிரமாண்ட ஷோரூம்...
யமஹா நிறுவனத்தின் பிரமாண்ட ஷோரூமான ப்ளூ ஸ்கொயர் அண்ணா சாலையை அடுத்து தற்போது அசோக் நகரில் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் ஹீரோ, ஹோண்டா, பஜாஜ் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான இருசக்கர வாகன நிறுவனமாக யமஹா இருக்கின்றது.
இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவுகின்றது. குறிப்பாக, ஆர்15, எஃப்இசட், எம்டி15, ஃபஸ்ஸினோ, இசட்ஆர், ரே ஆகிய இருசக்கர வாகனங்களுக்கு ஏகபோகமான வரவேற்பு நிலவுகின்றது.
இதனால், யமஹா நிறுவனம் இந்தியாவில் தனி கவனம் கொண்டு அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.
இதுமட்டுமின்றி, ஷோரூம் அமைப்பதிலும் வாகன அறிமுகத்தில் காண்பிப்பதைப் போன்ற தனித்துவமான ஆர்வத்தைச் யமஹா செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில், ப்ளூ ஸ்கொயர் எனப்படும் பிரமாண்ட ஷோரூமை இந்தியாவில் நிறுவ ஆரம்பித்திருக்கின்றது யமஹா.
இந்த ஷோரூமை, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து சென்னை அண்ணா சாலையில் தொடங்கியது. இங்கு தொடங்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் சுமார் 4,000 சதுர அடியில் நிறுவப்பட்டுள்ளது. இது மிகவும் பெரிய ஷோரூம் ஆகும். நாட்டிலேயே இருசக்கர வாகனங்களுக்காக திறக்கப்படும் மிகப்பெரிய ஷோரூம்களில் இது முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
இந்நிலையில், இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் விதமாக தற்போது மீண்டுமொரு ஷோரூம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஷோரூமையும் யமஹா நிறுவனம் சென்னையிலேயே தொடங்கியிருக்கின்றது. இம்முறை, சென்னை அசோக் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் சுமார் 2,450 சதுர அடியைக் கொண்டதாக இருக்கின்றது. இங்கும் அண்ணா சாலை ப்ளூ ஸ்கொயர் ஷோரூமில் காணப்படுவதைப்போன்று பிரத்யேக மாடல்கள் விற்பனைக்கு முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, ரேசிங் டிஎன்ஏ என்றழைக்கப்படும் யமஹாவின் தனித்துவமான ஸ்போர்ட்ஸ் ரக இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து டூ வீலர்களும் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சில கான்செப்ட் மாடல் இருசக்கர வாகனங்களையும் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களில் நிலைநிறுத்த யமஹா திட்டமிட்டிருக்கின்றது. அசோக் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் ஸ்ரீ மோட்டார்ஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டிருக்கின்றது.
இங்கு ஸ்கூட்டர்கள், பைக்குகள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து உதிரிபாகங்கள் மற்றும் ரைடருக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களும் விற்பனைச் செய்யப்பட உள்ளன. மேலும், வாகனங்களுக்கு தேவையான அக்ஸசெரீஸ்கள் இங்கு கிடைக்கும்.
யமஹா நிறுவனம் "கால் ஆஃப் தி ப்ளூ" (Call of the Blue) என்ற பிரச்சாரத்தை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. இதனடிப்படையிலேயே, ப்ளூ கோர் வாகனங்கள் இந்தியாவில் களமிறக்கப்பட்டு வருகின்றது.
இதைத்தொடர்ந்து, தற்போது ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களை நாடு முழுவதும் தொடங்கும் பணியை யமஹா மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இந்த சிறப்பான பிரமாண்ட ஷோரூமை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து சென்னையில் திறந்து வருகின்றது.
இதுதவிர, நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இதுபோன்ற பிரமாண்ட ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை தொடங்க யமஹா திட்டமிட்டிருக்கின்றது. இதனை 2020ம் ஆண்டின் இறுதிக்குள் செய்துமுடிக்க இருப்பதாக யமஹா இலக்கு நிர்ணயித்திருக்கின்றது.
இந்த ஷோரூம்களில் இருசக்கர வாகனத்தை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகை வழங்கவும் யமஹா திட்டமிட்டுள்ளது.
இத்துடன், யமஹா நிறுவனம் அதன் வாகனங்களை பிஎஸ் தரத்திற்கு இணக்கமாக அப்கிரேட் செய்யும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றது. அந்தவகையில், அதன் அதிகம் வரவேற்பு கிடைக்கும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த அப்கிரேஷனை வழங்கி வருகின்றது யமஹா.
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா