Just In
- 31 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வைரலான வீடியோ! உடனடியாக வீடு தேடி வந்து ஸ்கூட்டரை தூக்கிய போலீஸ்! செய்தியை கேட்டு கொந்தளித்த மக்கள்!
இணையத்தில் வீடியோ வைரலானதை அடுத்து புதிய ஸ்கூட்டரை போலீஸார் வீடு தேடி வந்து பறிமுதல் செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
விதிமீறல் வாதிகளுக்கு எதிராக போலீஸார் இரும்புக் கரம் தூக்க ஆரம்பித்திருக்கின்றனர். அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் விபத்து மற்றும் வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் களையெடுக்கும் விதமாக தீவிர கண்கானிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் தங்களின் கழுகு பார்வையைக் கொண்டு ஆராயத் தொடங்கியிருக்கின்றனர்.
ஏனெனில், இங்குதான் வாகனங்கள் சார்ந்து செய்யப்படும் விதிமீறல்கள் பற்றிய வீடியோ மற்றும் தகவல்கள் ஏராளமாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. எனவேதான், போலீஸார் சாலையோர சிசிடிவிக்களுக்கு எத்தகைய முக்கியத்துவத்தை வழங்குகின்றனரோ, அதேபோன்று, வலை தளங்களில் உலா வரும் வீடியோக்களும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
அந்தவகையில், இணையத்தில் வைரலாகிய வீடியோவாலே புள்ளிங்கோ காளையர்கள் இருவர் தங்களது ஸ்கூட்டரை இழந்து நிற்கின்றனர். கேரள மாநிலம், கொள்ளம் பகுதியிலேயே நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் கேரள அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி பேருந்துக்கு வழி விடாமல் சென்றதாகக் கூறப்படுகின்றது.
எனவேதான் கேரளா மோட்டார் வாகனத்துறையினர் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ஸ்கூட்டரைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். அவர்களிடத்தில் இருந்து யமஹா சிக்னஸ் ரே ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை இயக்கிச் சென்ற சிறுவனின் பெயர் உன்னிகிருஷ்ணன் என கண்டறியப்பட்டுள்ளது.
இவரே தனது நண்பனுடன் ஸ்கூட்டரில் சென்றபோது அரசு பேருந்துக்கு வழிவிடாமல் மிகவும் பொறுமையாகச் சென்றவர் ஆவார். இதனால், பாதிக்கப்பட்ட பேருந்து பயணி ஒருவர் எடுத்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோதான் சிறுவர்களின்மீதான போலீஸாரின் நடவடிக்கைக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.
சிறுவர்கள்மீது மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் போலீஸார் முன் வைத்திருக்கின்றனர். அதாவது, இருவரும் பேருந்துக்கு வழிவிடாமல் சென்றபோது ஹெல்மெட் அணியாதது மற்றும் நாடு ரோட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பிறருக்கு இடையூறு செய்தது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர். இதனடிப்படையிலேயே ஸ்கூட்டர் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் மீது எடுக்கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து கொள்ளம் போலீஸார் கூறுகையில், "முன்னதாக பதிவெண்ணைக் கொண்டு ஆராய்ந்ததில், அந்த ஸ்கூட்டருடைய உரிமையாளரின் செல்போன் எண் கிடைத்தது. அதை வைத்து தொடர்பு கொண்டபோது, அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்ததே. எனவேதான், நேரடியாக வீட்டிற்கே சென்றோம். ஆனால், அங்கு ஸ்கூட்டர் இல்லை. தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் ஸ்கூட்டர் வெறொரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தன. இதன் பின்னரே ஸ்கூட்டர் கைப் பற்றப்பட்டது" என்றனர்.
யமஹா ஸ்கூட்டரைப் பறிமுதல் செய்த போலீஸார், அந்த வாகனத்தின் உரிமையாளருடைய ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இதேபோன்று பேருந்திற்கு வழிவிடாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிக்கு கேரளா மோட்டார் வாகனத்துறையினர் ரூ. 10 ஆயிரம் அபராதத்தை வழங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நடவடிக்கையும் இணையத்தில் வைரலாகிய வீடியோவின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது. இவ்வாறு, இணையம் வாயிலாக எழும்பும் புகார் மற்றும் வைரலாகும் விதிமீறல் வீடியோக்கள் ஆகியவற்றிற்கு மோட்டார் வாகனத்துறையினர் உடனடி பதிலளித்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே யமஹா சிக்னஸ் ரே ஸ்கூட்டர் பறிமுதல் சம்பவம் கேரளாவில் அரங்கேறியிருக்கின்றது. இதுபோன்று பெரிய உருவம் கொண்ட வாகனங்களை மறித்தவாறுபயணிப்பது மிகவும் ஆபத்தான செயலாகும். பஸ் அல்லது டிரக்குகளை கட்டுப்படுத்துவது மக சிரமமான ஒன்று. ஆகையால்தான் கனரக வாகனங்களுக்கு முன் அல்லது பின் பக்கம் பயணிக்கும் கணிசமான இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும் கூறப்படுகின்றது.
ஆனால், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து முன் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனைக் கண்டிக்கும் விதமாகவே போலீஸார் தற்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறுவர் மற்றும் அவரது குடும்பத்தின் சிக்கலில் சிக்கியிருக்கின்றனர். அதேசமயம், சிறுவர்களின் இந்த அத்துமீறல் கேரள மக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!