Just In
- 43 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்!
யமஹா நிறுவனம் தண்ணீரில் ஓடும் பைக்கைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
யமஹா நிறுவனத்தை பற்றிய சிறப்பு தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியதால் அதன் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திகைத்துள்ளனர். மிகவும் ஸ்டைலான, அதி-திறன் மிக்க ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு களமிறக்கி வரும் இந்நிறுவனம், விரைவில் நீரில் பயணிக்கக்கூடிய இருசக்கர வாகனத்தைத் தயாரிக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலினாலயே அவர்கள் சந்தோஷத்தில் திகைத்திருக்கின்றனர்.
இந்த பிரத்யேக மாடலை எக்ஸ்டி500 மாடலின் உருவத்தில் அந்நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. 1975ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த மாடலே எக்ஸ்டி 500. இதைதான் நவீன காலத்திற்கு ஏற்ப புதிய தோற்றம் மற்றும் தொழில்நுட்பங்களுடன் யமஹா மீண்டும் உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
சமீப காலமாகவே யமஹா நிறுவனம், அதன் பழைய வாகனங்களின் பெயரில் நவீன மாடல்களை அறிமுகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதனால்தான், பழைய மாடலின் பெயரில் புதிய இருசக்கர வாகனங்கள் அறிமுகமாவது, அதன் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை.
இருப்பினும், மாடர்ன் பைக்காக உருவாகும் புதிய மாடல்களில் இடம்பெறும் வசதி பிரம்மிப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்ற வகையில் இருக்கின்றது. குறிப்பாக, புதிய உருவம், எஞ்ஜின் திறன் மற்றும் அதில் இடம் பெறும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவை ஆச்சரியத்திற்கே ஆச்சரியத்தை வழங்கம் வகையில் அமைகின்றது. அம்மாதிரியான வடிவமைப்பிலேயே எக்ஸ்டி500 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இந்த பைக்கிற்கான புதிய வடிவத்தை ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த புகழ்வாய்ந்த வாகன வடிவமைப்பாளரான மாக்சிம் லெபெப்வ்ரே வழங்கியிருக்கின்றார். 1975 எக்ஸ்டி500 மாடலை மறு தழுவல் செய்யும் வகையிலேயே அதற்கான புதிய வடிவத்தை அவர் வழங்கியிருக்கின்றார். இதனால், அப்பைக் புதிய அவதாரத்தைப் பெற்றிருக்கின்றது.
யமஹாவின் இந்த கான்செப்ட் மாடலுக்கு எக்ஸ்டி 500 மட்டுமின்றி மற்றுமொரு பெயரும் வைக்கப்பட்டுள்ளது. எச்2ஓ என்ற புனைப்பெயரிலும் அதை அழைக்கப்படுகின்றது. எச்2ஓ என்பது நீரைக் குறிக்கும் அறிவியல் பெயராகும். இந்த பைக் தண்ணீரைக் கொண்டு இயங்கும் என்பதனாலயே இப்பெயரை அந்நிறுவனம் வைத்திருக்கின்றது. ஆம், புதிய எக்ஸ்டி500 இயங்க ஹைட்ரஜனோ அல்லது வேறு எந்த எரிபொருளும் தேவைப்படாது.
வெறும் தண்ணீர் மட்டுமே போதும் என கூறப்படுகின்றது. இதற்கேற்ப பிரத்யேக மோட்டாரே தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓர் அடைக்கப்பட்ட லூப் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் வழியாக தண்ணீர் அதிக அழுத்தப்படும். அப்போது கிடைக்கும் ஆற்றல், இயங்கு சக்தியாக மாற்றப்பட்டு நேரடியாக பைக்கின் பின் வீலுக்கு வழங்கப்படுகின்றது.
இதனால், வழக்கமான எரிபொருள் இயங்குவதைப் போன்றே அப்பைக்கும் இயங்கும். இந்த பைக் தற்போது கான்செப்ட் (மாதிரி) மாடலாகவே உருவாக்கப்பட்டு வருவதால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அது வெளியிடவில்லை. ஆனால், விரைவில் இது உற்பத்தி மாடலாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பைக்கிற்கு பிஎம்டபிள்யூ கே1300ஆர் பைக்கின் ஸ்டைல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, நேக்கட் ஸ்போர்ட்ஸ் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது விற்பனையில் இருக்கும் பிற பைக்குகளைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தை இதற்கு வழங்கும் விதமாக அதி நவீன சிறப்பம்சங்கள் இதில் சேர்க்கப்பட உள்ளன.
இது தவிர, இது ஒற்றை பக்க ஸ்விங்கார்ம் மற்றும் பின்புறத்தில் ஒரு மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பையும் கொண்டுள்ளது. மேலும், வித்தியாசமான கைப்பிடிகள், சிறிய எல்இடி ஹெட்லைட்டை உள்ளிட்டவையும் அதில் பொருத்தப்பட இருக்கின்றது. இவையனைத்தும் சேர்ந்து மோட்டார் சைக்கிளுக்கு டர்ட் பைக் போன்ற மெல்லிய தோற்றத்தை வழங்குகின்றது.
யமஹா நிறுவனம், எக்ஸ்டி500 மாடலை 1975ம் ஆண்டில் விற்பனைக்கு வழங்கும்போது 499சிசி திறனுடைய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினில் வழங்கியது. இது, 26.5 பிஎஸ் மற்றும் 38 என்எம் டார்க்கை வேளியேற்றும் திறனைக் கொண்டது. ஆனால், தற்போதைய மாடலில் தண்ணீரில் இயங்கும் எந்திரம் இடம்பெறவிருப்பதால் அதில் என்னமாதிரியான திறன் வெளிப்பாடு கிடைக்கும் என்பது தெரியவில்லை. மேலும், அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்