Just In
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 11 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இப்படிப்பட்ட பைக்குகளை கூடவா ஹோண்டா தயாரிக்குது?! 2021 கோல்டு விங் உலகளவில் வெளியீடு..
2021 ஹோண்டா கோல்டு விங் மோட்டார்சைக்கிள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2021 ஹோண்டா பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் லக்சரி மோட்டார்சைக்கிளாக கோல்டு விங் விளங்குகிறது. நம்ப முடியாத தொழிற்நுட்ப அம்சங்களுடன் வழங்கப்படும் இந்த லக்சரி பைக்கின் 2021 வெர்சன்தான் உலகளவில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
2021 ஹோண்டா கோல்டு விங் முன்பை காட்டிலும் கூடுதல் மேம்படுத்தப்பட்ட பயண சவுகரியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் சவுகரியமான கோணத்துடன் பின் இருக்கை பயணிக்கான பேக்ரெஸ்ட் ரீடிசைனில் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட பேடிங் மற்றும் உயரமான தோற்றத்தினால் ஓட்டுனர் மற்றும் பின் இருக்கை பயணி என இருவரும் 2021 கோல்டு விங் பைக்கில் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பெறலாம். பைக்கின் ப்ரீமியம் தரத்தை அதிகரிக்கும் விதமாக இருக்கை சிந்தெட்டிக் லெதரால் ஹோண்டா மூடியுள்ளது.
மேலும் பைக்கில் பொருட்களை வைப்பதற்கு கொடுக்கப்படும் சேமிடத்தின் கொள்ளளவும் 11 லிட்டர் அதிகரிக்கப்பட்டு 61 லிட்டராக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் 2021 கோல்டு விங் பைக்கில் 2 ஹெல்மெட்களை எந்தவொரு பிரச்சனையுமின்றி வைக்கலாம்.
தன்னிச்சையாக சத்தத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய 45 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி & ஆப்பிள் கார்ப்ளே ஒருங்கிணைப்பையும் இந்த தொலைத்தூர பைக்கில் ஹோண்டா வழங்கியுள்ளது.
ஸ்டைலை பொறுத்தவரையில் பைக்கின் பின்பக்க டெயில்லேம்பில் மட்டும்தான் தயாரிப்பு நிறுவனம் சிறிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இதுதவிர்த்து பைக்கின் தோற்றத்தில் பெரிய அளவில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை.
2021 கோல்டு விங் பைக்கில் 1.8 லிட்டர் 6-சிலிண்டர் என்ஜின் கிடைமட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிசிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.
இதில் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் எலக்ட்ரிக் மூலமாக பைக்கை பின்னோக்கி இயக்குவதற்கு உதவும். ஆனால் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் மற்ற பைக்குகளை போல் பின்னோக்கி தள்ளி கொண்டுதான் போக முடியும். என்ஜினின் ஆற்றல் ஷாஃப்ட் மூலமாக இயக்கும் சக்கரத்திற்கு வழங்கப்படும்.
ஸ்டாண்டர்ட் கோல்டு விங் புதிய பேர்ல் மட் க்ரே நிறத்திலும், டாப் வேரியண்ட் கன்மெட்டல் கருப்பு மெட்டாலிக் நிறத்திலும் கிடைக்கும். டிசிடி வேரியண்ட்டை கேண்டி அர்டெண்ட் சிவப்பு நிறத்திலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். 2021 ஹோண்டா கோல்டு விங்-இன் அனைத்து வேரியண்ட்டும் அடுத்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது.
அங்கு இதன் விலை 28,300 அமெரிக்க டாலர்களில் இருந்து துவங்கவுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.20.37 லட்சமாகும். இந்திய சந்தையில் கோல்டு விங் பைக்கை இந்த வருடத்தில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு