Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நமது கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்!! 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் துவங்கின
ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரி பணிகள் நமது கோயம்புத்தூர் மற்றும் திருச்சி நகரங்களிலும் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கோவை மற்றும் திருச்சி நகரங்களில் ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கான இந்த இரு ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.60 லட்சம் மற்றும் ரூ.1.41 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த டெலிவிரி பணிகளுக்காக கோயம்புத்தூரில் ராம்நகரில் உள்ள ராஜ்துரையின் இ-வைகல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் ஏத்தர் நிறுவனம் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.
அதேபோன்று திருச்சியில் அண்ணாமலை நகரில் உள்ள வேலா ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடனும் ஏத்தர் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த இரு நகரங்களிலும் விரைவில் மேற்கூறப்பட்ட ஏத்தர் 450 ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்த இரு நகரங்களின் மூலம் தமிழகத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் நகரங்களின் எண்ணிக்கை மூன்றாகியுள்ளது. ஏத்தர் ஸ்கூட்டரை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ரைட்கள் கொடுக்கப்படவுள்ளன.
கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் இன்னும் சில வாரங்களில் ஏத்தர் விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுவிடும். தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் & டெலிவிரிகளை துவங்குவதுடன் விரைவு-சார்ஜிங் நிலையங்களையும் இந்த இரு நகரங்களில் உருவாக்க ஏத்தர் தயாராகி வருகிறது.
இதற்காகவே ஏற்கனவே கோவையில் 5 விரைவு-சார்ஜிங் மையங்களையும் திருத்தியில் 2 மையங்களையும் உருவாக்கும் பணிகளில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இறங்கிவிட்டது. அதிகளவில் விரைவு-சார்ஜிங் நிலையங்களை அமைத்துவிட்டால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் பற்றிய கவலை ஏத்தர் நிறுவனத்திற்கு இருக்காது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 18 நகரங்களில் ஏத்தரின் 120 பொது விரைவு-சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஏத்தரின் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 85கிமீ என்றளவில் உள்ளது.
அதாவது இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து கொண்டு அதிகப்பட்சமாக 85கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும். இந்த வகையில் பார்த்தோமேயானால், இதன் பேட்டரி சார்ஜ் செய்யப்படும் ஒவ்வொரு நிமிடமும் ஸ்கூட்டருக்கு 1.45 கிமீ தூரம் வரையில் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது.
ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் 2.61kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் மணிக்கு 40கிமீ என்ற வேகத்தை 3.3 வினாடிகளிலேயே எட்டிவிட முடியும். அதுவே 450 ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 70கிமீ ஆக உள்ளது.
இதன் 2.4kWh பேட்டரி தொகுப்பு சார்ஜ் ஆகும் ஒவ்வொரு நிமிடமும் ஸ்கூட்டருக்கு 1 கிமீ தூரம் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. இது 40kmph வேகத்தை எட்ட குறைந்தப்பட்சம் 3.9 வினாடிகள் தேவைப்படும். 450 எக்ஸ் ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்புடன் தொடுத்திரை இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுகிறது.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்