Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு மாறிய பிரபல மின்வாகன நிறுவனத்தின் உற்பத்தி ஆலை... எந்த நிறுவனம் தெரியுமா?
பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனர்ஜி அதன் புதிய மின் வாகன உற்பத்தி ஆலையை தமிழகத்தின் ஓசூரில் தொடங்கியிருக்கின்றது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஏத்தர் எனர்ஜி. இந்நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.-இருப்பினும் குறிப்பிட்ட சில காரணங்களால் நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இந்நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து வருகின்றது.
இந்நிலையிலேயே தனது புதிய மின் வாகன உற்பத்தி ஆலையை தமிழகத்தின் ஓசூரில் ஏத்தர் எனர்ஜி அமைத்துள்ளது. முன்னதாக பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டிலேயே இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. விரிவாக்கம் காரணமாக இதன் ஆலையை தற்போது ஏத்தர் தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.
கடந்த 2019ம் ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டநிலையில், தற்போது ஆலை முழுமையாக உற்பத்திக்கு தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படம் மற்றும் தகவலை கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது.
இந்த ஆலை சுமார் 4 லட்சம் ஏக்கரைக் கொண்ட தயாரிப்பு ஆலை ஆகும். இங்கிருந்தே நாடு முழுவதிற்குமான மின்சார வாகனங்களை ஏத்தர் தயாரித்து விற்பனைச் செய்ய இருக்கின்றது. இதன் வருகைக்கு தமிழக மக்கள் மற்றும் மின் வாகன ஆர்வலர்கள் சிலர் வரவேற்பளித்திருக்கின்றனர்.
இந்த புதிய ஆலையின் மூலம் சுமார் 4,000 பணியாளர்கள் புதிய வேலை வாய்ப்பினை பெற்றிருக்கின்றனர். இதுமட்டுமின்றி, தமிழகத்தின் மின்சார வாகன வளர்ச்சிக்கும் இந்த ஆலையின் வருகை மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏத்தர் நிறுவனம் இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் தனது மின் வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.-அந்தவரிசையில் மிக சமீபத்தில் மேலும் சில நகரங்கள் சேர்க்கப்பட்டன. மைசூர், ஹூப்ளி, ஜெய்பூர், இந்தூர், பனாஜி, புபனேஸ்வர், நாசிக், சூரத், சண்டிகர், விஜயவாடா,-விசாகப்பட்டினம், கவுஹாத்தி, நாக்பூர், நொய்டா, லக்னோ மற்றும் சிலிகிரி ஆகிய பகுதிகளிலேயே அறிமுகம் செய்யப்பட்டன.
விடுபட்டிருக்கும் மேலும் சில இரண்டாம் நிலை நகரங்களிலும் மின் வாகனத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஏத்தர் ஈடுபட்டு வருகின்றது.-அவ்வாறு, புதிய நகரங்களில் கால் தடம் பதிக்கும் மின் வாகன-தேவை அதிகரிக்கும் என்பதனாலயே புதிதாக ஓர் உற்பத்தி ஆலையை தமிழகத்தின் ஓசூரில் ஏத்தர் தொடங்கியிருக்கின்றது.
இந்த புதிய ஆலையின் வாயிலாக ஆண்டு ஒன்றிற்கு 1 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய ஏத்தர் எனெர்ஜி திட்டமிட்டிருக்கின்றது. இதனை எதிர்காலத்தில் 5 லட்சங்களாக உயர்த்த அது திட்டமிட்டிருக்கின்றது. நாடு முழுவதும் விற்பனைச் செய்ய இந்த உற்பத்தி திறனே போதுமானது என கூறப்படுகின்றது.
இதுமட்டுமின்றி, விரைவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும்-இந்த உற்பத்தி எண்ணிக்கை பலனளிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏத்தர் நிறுவனம் தனது உற்பத்தி ஆலை இருக்கும் இடத்தை மாற்றியிருந்தாலும், இதன் கார்பரேட் அலுவலகம் பெங்களூருவிலேயே செயல்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா