Just In
- 22 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புத்தாண்டில் பஜாஜ் ஆட்டோ அசத்தல்... சந்தை மூலதனம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது!
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த மைல்கல்லை தொட்ட உலகின் முதல் இருசக்கர வாகன நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஏற்றுமதியில் நம்பர்-1 நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், புத்தாண்டு தினமான நேற்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகின் அதிக மதிப்பு வாய்ந்த இருசக்கர வாகன நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
ஆம், தேசிய பங்கு சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ.3,479 ஆக நேற்று வர்த்தகமானது. இதனால், அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.
சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, ரூ.1 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இருசக்கர வாகன நிறுவனமாக பஜாஜ் ஆட்டோவை குறிப்பிடுகின்றனர்.
சர்வதேச அளவில் வேறு எந்த இருசக்கர வாகன நிறுவனமும் ரூ.1 லட்சம் கோடி என்ற சந்தை மூலதன மதிப்பை இதுவரை தொட்டதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய சாதனை மூலமாக, உலகின் அதிக மதிப்பு வாய்ந்த இருசக்கர வாகன நிறுவனம் என்ற பெருமையையும் பஜாஜ் ஆட்டோ பெற்றுள்ளது.
தேசிய பங்கு சந்தையில் நேற்று பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.3,479 என்ற விலையில் வர்த்தகமானது. வாகன உற்பத்தியில் 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகினஅ 70 நாடுகளில் இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ளது. பல்சர், பாக்ஸர், பிளாட்டினா ஆகிய பைக்குகள் பல நாடுகளில் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த பைக் மாடல்களாக உள்ளன.
பங்கு சந்தையில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கு விலையை, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கையுடன் பெருக்கும்போது வரும் மொத்த மதிப்புதான் சந்தை மூலதனம் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பங்கு விலை ஒவ்வொரு நாளின் வர்த்தகத்தை பொறுத்து மாறுபடும். எனவே, அதன் சந்தை மூலதன மதிப்பிலும் வேறுபாடுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!