Just In
- 36 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Movies ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது?
பஜாஜ் நிறுவனம் அதன் குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த அம்சம் குறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.
தினசரி மற்றும் மைலேஜ் மீது அதிக அக்கறைக் கொண்ட வாகன பிரியர்களின் முதல் நிலை தேடல்களில் பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா பைக்கும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பைக்கை அதிக பாதுகாப்பு திறன்மிக்க இருசக்கர வாகனமாக பஜாஜ் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) எனும் வசதியையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிக வழுப்பான சாலைகளில்கூட க்ரிப்பான பிரேக்கிங் திறனை பெற முடியும். வழு வழுப்பான சாலைகளில் சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென பிரேக் பிடித்தால், வாகனம் சருக்கிவிடும்.
ஆனால், இந்த ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் இதுபோன்ற எந்தவிதமான சிக்கலையும் சந்திக்காது. குறிப்பாக, வாகனத்தைக் கட்டுக்குள் வைத்து நிலையான பிரேக்கிங்கை வழங்கும். எனவேதான் 150 சிசி-க்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்களில் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் பொருத்த வேண்டும் என இந்திய அரசு அறிவித்திருக்கின்றது.
இருப்பினும், தனது 115 சிசி திறன் கொண்ட பைக்கிலேயே பஜாஜ் ஏபிஎஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அறிமுகத்தின் மூலம் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட பைக்காக பிளாட்டினா 110 பைக் மாறியிருக்கின்றது.
இந்த மோட்டார்சைக்கிளில் 115சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்டது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 6.33KW (8.6 பிஎஸ்) பவரை 7,000 ஆர்பிஎம்மிலும், 9.81 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.
ஏற்கனவே இந்த ஏபிஎஸ் வசதிக் கொண்ட பிளாட்டினா 110 பைக்கை டீலர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை பஜாஜ் தொடங்கிவிட்டது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக்கின் புகைப்படங்கள் மிக சமீபத்தில் இணையத்தில் வைரலாகின. இந்த நிலையிலேயே அதிகாரப்பூர்வ அறிமுகத்தை பஜாஜ் இன்று செய்திருக்கின்றது.
புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக் வால்கானிக் சிவப்பு, சார்கோல் பிளாக் மற்றும் கடல் நீலம் ஆகிய மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இப்பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக நைட்ராக்ஸின் ஸ்பிரிங்-ஆன்-ஸ்பிரிங் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ட்யூப் லெஸ் டயர், எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய ஹெட்லேம்ப், 20 சதவீதம் நீளமான இருக்கை, சற்று பரந்த அளவிலான கால் வைக்கும் ரப்பர் பேட்கள், ஏபிஎஸ் பற்றிய தகவலை வழங்கும் அனலாக் ஸ்பீடோ மீட்டர் என எக்கசக்க சிறப்பம்சங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதியுடைய பிளாட்டினா 110 பைக்கிற்கு ரூ. 65,920 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த குறைந்த விலையிலேயே அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் ஏபிஎஸ் தொழில்நுட்பத்தை பஜாஜ் வழங்கியிருக்கின்றது. இத்துடன், 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் முன் பக்க வீலில் இணைக்கப்பட்டிருக்கின்றது. இவை, திடீர் நிறுத்தத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா