Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெங்களூர் கொண்டு வரப்பட்டார் சி.எஸ்.சந்தோஷ்... உடல்நிலையில் லேசான முன்னேற்றம்!
டக்கார் ராலியில் படுகாயமடைந்த இந்திய பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் சவூதியிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூர் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதன்மையான ராலி ரேஸ் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் அண்மையில் சவூதி அரேபியாவில் நடந்த டக்கார் ராலி பந்தயத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உலகின் மிக சவாலான இந்த ராலி ரேஸ் பந்தயத்தில் 7-வது முறையாக பங்கேற்றிருந்த சந்தோஷ் பெரிய அளவிலான ஆவலை இந்திய மோட்டார் பந்தய ரசிர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தார்.
ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் சென்றிருந்த சந்தோஷ், டக்கார் ராலியின் 7வது ஸ்டேஜ் பந்தயத்தில் அதிவேகத்தில் சென்றபோது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், சி.எஸ்.சந்தோஷ் படுகாயமடைந்தார். குறிப்பாக, தலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பிற வீரர்களின் உதவியால், மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலமாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ரியாத் மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த, சி.எஸ்.சந்தோஷின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவரை சொந்த ஊரான பெங்களூருக்கு கொண்டு வர குடும்பத்தினர் விரும்பினர்.
இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ரியாத் நகரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூர் கொண்டு வரப்பட்டார். பின்னர், அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதால், மயக்க மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், அவர் தற்காலிக கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவர் விரைவாக நலம் பெற மோட்டார் பந்தய வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!