Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
டிஏஓ நிறுவனம் ஒரே நேரத்தில் மூன்று மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர்கள் குறித்த நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.
நேற்றைய தினம் (ஏப்ரல் 22) 703 எனும் பெயர் கொண்ட அதி-வேக திறனுடைய மின்சார ஸ்கூட்டரை டிஏஓ இவி டெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சரவெடி வெடிக்கும் வகையில் இன்றைய தினமும் இந்நிறுவனம் புதுமுக மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் மட்டுமே ஒட்டுமொத்தமாக மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை டிஏஓ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மூன்று மின்சார வாகனங்களும் குறைந்த ஓடும் வேகம் திறன் கொண்டவை ஆகும். வித்யுத் 106, வித்யுத் 108 மற்றும் இசட்ஓஆர் 405 (ZOR 405) ஆகிய மின்சார வாகனங்களையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், வித்யுத் 106 மற்றும் வித்யுத் 108 ஆகிய இரண்டும் ஸ்கூட்டர் ரக மின் வாகனம் ஆகும். ஸோர் 405 மொபட் ரக மின்சார வாகனம் ஆகும். இவற்றில் முதலில் மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றிய தகவலைப் பார்த்துவிடலாம்.
வித்யுத் 106 மற்றும் வித்யுத் 108 ஆகிய இரண்டும் வெவ்வேறு உருவ அமைப்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால், மின் மோட்டார் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் இரண்டும் இரட்டையர்களைப் போன்று காட்சியளிக்கின்றன. இரு மின்சார ஸ்கூட்டர்களிலும் 250 வாட் திறன் கொண்ட மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. இதேபோன்று, 1.38kWh திறன் கொண்ட பேட்டரியே இரு ஸ்கூட்டர்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
உருவ அமைப்பில் இரு ஸ்கூட்டர்களும் மாறுபட்டதாக இருப்பதாக நாங்கள் முன்னரே கூறியிருந்தோம். அந்தவகையில், வித்யூத் 106 மின்சார ஸ்கூட்டரில் மாறுபட்ட உருவ அமைப்பை வழங்குவதற்காக நிறுவனம் பின் பக்க பயணி சாய்ந்து கொள்ளும் வகையில் பேக் ரெஸ்ட் அமைப்பை வழங்கியிருக்கின்றது.
இந்த அம்சம் வித்யூத் 108 மாடலில் வழங்கப்படவில்லை. இரு மின்சார ஸ்கூட்டர்களிலும் எல்இடி தரத்திலான மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹெட்லேம்ப் தொடங்கி பின்பக்க சிவப்பு விளக்கு வரை எல்இடி மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
டிஏஓ ஸோர் 405:
டெலிவரி சேவைக்கு பயன்படுத்தும் வகையில் கேரியர் வசதியுடன் வந்திருப்பதே இந்த ஸோர் 405 மின்சார வாகனம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த மின்சார வாகனத்திலும் 250 வாட் மின் மோட்டார் மற்றும் 1.38kWh பேட்டரி பேக் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மொபட்டை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இவ்வாகனத்தின் இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது உயர்-தர பிரேக்கிங் வசதியை வழங்க உதவும். தற்போது அறிமுகமாகியிருக்கும் மூன்று மின்சார வாகனங்களும் குறைந்த வேகம் திறன் கொண்டவை என்பதால் இவற்றை இந்தியாவில் பயன்படுத்த பதிவு சான்றோ அல்லது ஓட்டுநர் உரிமமோ தேவைப்படாது.
தற்போது டிஏஓ நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் மட்டுமே செய்திருக்கின்றது. இன்னும் விற்பனைக்குக் கொண்டுவரவில்லை. விரைவில் விற்பனைக்கான அறிவிப்பை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நேரத்தில் இந்த மின்வாகனங்களின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கின்றன.