Just In
- 9 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 57 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மிக பெரிய சரிவு... விடாது கருப்புபோல் விரட்டும் விற்பனை சரிவு... ஜாம்பவான் நிறுவனத்துக்கே இந்த நிலைமையா!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் மாபெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்திய மோட்டார்சைக்கிள் வாகன உலகின் ஜம்பவான் என்றழைக்கப்படும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை விற்பனைச் சரிவு விடாது கருப்பைப் போல் விரட்டி வருகின்றது. நிறுவனம் கடந்த மாதம் மாபெரும் விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.
ஒவ்வொரு மாதமும் இறுதியில் விற்பனை நிலவரம் பற்றிய தகவலை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் அதன் கடந்த நவம்பர் 2021 விற்பனை நிலவரம் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. அது வெளியிட்டிருக்கும் தகவலின்படி 69 சதவீதம் விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்திய வாகன உலகையே இந்த தகவல் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. இருசக்கர உலகின் ஜாம்பவான் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலைமையா எனவும் கேள்வியெழுப்பச் செய்திருக்கின்றது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2021 நவம்பரில் ஒட்டுமொத்தமாக 3,49,393 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது.
கடந்த ஆண்டு, அதாவது, 2020ம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் மட்டும் நிறுவனம் 5,91,091 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடுகையிலேயே நடப்பாண்டு நவம்பரில் நிறுவனம் மாபெரும் விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பது தெரிய வருகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் காலம் தாழ்ந்து பொழிந்து வரும் பருவ மழையும் இந்த விற்பனை வீழ்ச்சிக்கு ஓர் காரணம் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி சற்றே உயர்வைக் கண்டிருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் அதன் ஸ்கூட்டர்கள் 20,208 யூனிட் வரை மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. இது 2021 நவம்பர் மாத விற்பனை நிலவரம் ஆகும். இதே நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் 2020 நவம்பரில் 49,654 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருந்தன. இதனுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் ஸ்கூட்டர்களின் விற்பனை வீழ்ச்சி 145 சதவீதமாக இருக்கின்றது.
2021 நவம்பர் மாதத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 3,28,862 யூனிட்டுகளை மட்டுமே உள் நாட்டு சந்தையில் ஹீரோ விற்பனைச் செய்திருக்கின்றது. அதுவே, 2020 நவம்பரி பார்த்தோமேயானால் நிறுவனம் 5,75,957 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருந்தது. இதனுடன் நடப்பாண்டு விற்பனையை ஒப்பிட்டு பார்த்தால் இது 75 சதவீத விற்பனை வீழ்ச்சியைக் குறிக்கின்றது.
எனவே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கடந்த மாதம் குறைந்தளவு வரவேற்புக் கிடைத்திருப்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது. இந்த நிலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மட்டுமின்றி இன்னும் பிற நிறுவனங்களும் இந்தியாவில் சந்தித்து வருகின்றன.
ஹோண்டா மோட்டார்சைக்கிள், ராயல் என்பீல்டு, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்நாட்டு விற்பனையில் கடும் சரிவைச் சந்தித்திருக்கின்றன. அதேநேரத்தில், இவற்றில் பல நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியில் லேசான உயர்வைச் சந்தித்திருக்கின்றன.
வாகன உற்பத்தியாளர்கள் உள் நாட்டு சந்தையில் கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்திக்க பருவ மழை மட்டுமே காரணம் இல்லை. நாட்டில் எரிபொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருவதும் ஓர் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. தொடர் விலை உயர்வின் காரணமாக தற்போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் ரூ. 100ஐ தாண்டி விற்பனைக்குக் கிடைக்கின்றது.
பலர் எங்கு இதன் விலை ரூ. 200ஐ தொட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். இதுமாதிரியான அச்சங்களின் வெளிப்பாடகவே மாபெரும் நிறுவனங்களின் விற்பனை வீழ்ச்சி அமைந்திருக்கின்றது. பொதுவாக இந்திய சந்தையில் பண்டிகைத் தினங்களில் வாகன விற்பனை சூடுபிடித்துக் காணப்படும். ஆனால், இந்த வருடம் அதுகூட இல்லை.
குறிப்பிட்டு கூற வேண்டுமானால் தீபாவளி பண்டிகை கடும் துயரமான பண்டிகையாக வாகன உற்பத்தியாளர்களுக்கு கடந்திருக்கின்றது. இதற்கு கடந்த நவம்பர் மாத விற்பனையே சான்று. அதேநேரத்தில், மின்சார வாகனங்களின் விற்பனை லேசாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350