Just In
- 1 hr ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 1 hr ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 2 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கொரோனா பரவல் தீவிரம்... பணியாளர்கள் நலன்தான் முக்கியம்... ஹீரோ மோட்டோார்ப் எடுத்த அதிரடி முடிவு!
நாடுமுழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பணியாளர்களின் நலன் கருதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் தனது அனைத்து இருசக்கர வாகன உற்பத்தி ஆலைகள் மற்றும் சர்வதேச உதிரிபாக மையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். கொரோனா பரவல் தீவிரமாகி இருப்பதால், இந்த அதிரடி முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பால், ஹீரோ மோட்டோகார்ப் ஆலைகளில் உற்பத்தி அடியோடு முடங்கி இருக்கிறது. அதேநேரம், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆலைகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகளை செய்ய இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆலைகளை மூடியதால் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது என்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நம்புகிறது. இந்த உற்பத்தி இழப்பை ஆலை திறந்தவுடன் இந்த காலாண்டு காலத்திலேயே சரிகட்டிவிடுவதற்கான திட்டத்தையும் வைத்துள்ளது.
இதன்மூலமாக, தேவையை எளிதாக பூர்த்தி செய்துவிடலாம் என்று அந்நிறுவனம் கருதுகிறது. ஹீரோ மோட்டோகார்ப் ஆலைகளில் உற்பத்தி முடங்கி இருப்பதால், முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் டெலிவிரி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மேலும், தனது சர்வதேச உதிரிபாக மையத்தை 4 நாட்கள் மூடுவதற்கு ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது. இதர கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றுவோர் சுழற்சி முறையில் அலுவலகம் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார், ஹரியானாவில் தாருஹெரா, குர்கான், குஜராத்தில் வதோதரா மற்றும் ராஜஸ்தானில் நீம்ரானா ஆகிய இடங்களில் இருசக்கர வாகன உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் மொத்தமாக ஆண்டுக்கு 9.8 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
கொரோனா பரவல் காரணமாக, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆலைகளை தற்காலிகமாக மூடும் முடிவை ஹீரோ மோட்டோகார்ப் எடுத்துள்ளது. பணியாளர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?