Just In
- 37 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 3 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இனி எப்பவும் கார், பைக் ஓட்டவே முடியாது போல... திடீரென கிளம்பிய புதிய பிரச்னையால் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மற்றொரு புதிய பிரச்னை ஒன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விலையை அதிரடியாக உயர்த்தவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்களின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. மாடலை பொறுத்து விலை உயர்வு மாறுபடலாம். அதிகபட்சமாக 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்படும். உற்பத்தி செலவு உயர்ந்து கொண்டே வருவதால் இந்த விலை உயர்வு அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து சிக்கன நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சுமை குறைக்கப்படும். ஆனால் நடப்பாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை 3வது முறையாக உயரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக நடப்பாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை உயர்ந்திருந்தது.
இந்த வரிசையில் நடப்பாண்டில் தற்போது 3வது முறையாக தனது இரு சக்கர வாகனங்களின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் உயர்த்தவுள்ளது. இதை தொடர்ந்து மற்ற முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டூவீலர்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் இரு சக்கர வாகன நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
இரு சக்கர வாகன நிறுவனங்கள் மட்டுமல்லாது, கார் நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளன. இதில், மாருதி சுஸுகி நிறுவனம் முக்கியமானது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக சமீபத்தில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்திருந்தது.
மாருதி சுஸுகி நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக மக்கள் மத்தியில் பொது போக்குவரத்து செல்வாக்கை இழந்துள்ளது.
அதற்கு பதில் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பது சந்தேகம்தான். பொது போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் கூட, மக்கள் சொந்த வாகனங்களை விரும்புவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.