Just In
- 14 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இனி எப்பவும் கார், பைக் ஓட்டவே முடியாது போல... திடீரென கிளம்பிய புதிய பிரச்னையால் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மற்றொரு புதிய பிரச்னை ஒன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விலையை அதிரடியாக உயர்த்தவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்களின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. மாடலை பொறுத்து விலை உயர்வு மாறுபடலாம். அதிகபட்சமாக 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்படும். உற்பத்தி செலவு உயர்ந்து கொண்டே வருவதால் இந்த விலை உயர்வு அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து சிக்கன நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சுமை குறைக்கப்படும். ஆனால் நடப்பாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை 3வது முறையாக உயரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக நடப்பாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை உயர்ந்திருந்தது.
இந்த வரிசையில் நடப்பாண்டில் தற்போது 3வது முறையாக தனது இரு சக்கர வாகனங்களின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் உயர்த்தவுள்ளது. இதை தொடர்ந்து மற்ற முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டூவீலர்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் இரு சக்கர வாகன நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
இரு சக்கர வாகன நிறுவனங்கள் மட்டுமல்லாது, கார் நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளன. இதில், மாருதி சுஸுகி நிறுவனம் முக்கியமானது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக சமீபத்தில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்திருந்தது.
மாருதி சுஸுகி நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக மக்கள் மத்தியில் பொது போக்குவரத்து செல்வாக்கை இழந்துள்ளது.
அதற்கு பதில் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பது சந்தேகம்தான். பொது போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் கூட, மக்கள் சொந்த வாகனங்களை விரும்புவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்