Just In
- 46 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி எப்பவும் கார், பைக் ஓட்டவே முடியாது போல... திடீரென கிளம்பிய புதிய பிரச்னையால் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மற்றொரு புதிய பிரச்னை ஒன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விலையை அதிரடியாக உயர்த்தவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்களின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. மாடலை பொறுத்து விலை உயர்வு மாறுபடலாம். அதிகபட்சமாக 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்படும். உற்பத்தி செலவு உயர்ந்து கொண்டே வருவதால் இந்த விலை உயர்வு அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து சிக்கன நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சுமை குறைக்கப்படும். ஆனால் நடப்பாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை 3வது முறையாக உயரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக நடப்பாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை உயர்ந்திருந்தது.
இந்த வரிசையில் நடப்பாண்டில் தற்போது 3வது முறையாக தனது இரு சக்கர வாகனங்களின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் உயர்த்தவுள்ளது. இதை தொடர்ந்து மற்ற முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டூவீலர்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் இரு சக்கர வாகன நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
இரு சக்கர வாகன நிறுவனங்கள் மட்டுமல்லாது, கார் நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளன. இதில், மாருதி சுஸுகி நிறுவனம் முக்கியமானது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக சமீபத்தில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்திருந்தது.
மாருதி சுஸுகி நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக மக்கள் மத்தியில் பொது போக்குவரத்து செல்வாக்கை இழந்துள்ளது.
அதற்கு பதில் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பது சந்தேகம்தான். பொது போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் கூட, மக்கள் சொந்த வாகனங்களை விரும்புவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!