Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அட போங்க புது வண்டி வாங்குற ஆசையே போய்டும் போலிருக்கு! ஹோண்டாவின் அதிரடி முடிவால் மக்கள் புலம்பல்!
ஹோண்டா நிறுவனம் எடுத்திருக்கும் அதிரடி முடிவால் ஹோண்டா இருசக்கர வாகன பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்றைய (ஜூலை 7) தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ச்சியாக எரிபொருள் விலையுயர்ந்து வருவதனால் மக்கள் மிகக் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும், தினசரி இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் சொல்ல முடியா துயரங்களைச் சந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நிலையால், பலர் இருசக்கர வாகனங்களை ஒதுக்கிவிட்டு தற்போது சைக்கிள் பயன்பாட்டிற்கு களமிறங்கியிருக்கின்றனர்.
தொடர்ச்சியாக எரிபொருள் விலையுயர்ந்து வருவதனால் மக்கள் மிகக் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும், தினசரி இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் சொல்ல முடியா துயரங்களைச் சந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நிலையால், பலர் இருசக்கர வாகனங்களை ஒதுக்கிவிட்டு தற்போது சைக்கிள் பயன்பாட்டிற்கு களமிறங்கியிருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிய வாகனங்களை வாங்குவதற்கு ஆப்பு வைக்கும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்களின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், கார் உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் விலையுயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.
இதுமட்டுமின்றி, இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பும் விலையுயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், மேற்கூறிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது ஹோண்டாவும் இணைந்துள்ளது.
ஆமாங்க, ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த டூ-வீலர்களின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி மற்றும் 125 தேர்வுகளின் விலையையே தற்போது நிறுவனம் உயர்த்தியுள்ளது.
முன்னதாக ஹோண்டா ஆக்டிவா 6ஜி ரூ. 69,479 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. ஆனால், புதிய விலையுயர்வால் அது தற்போது ரூ. 70,716ஆக மாறியுள்ளது. இதேபோன்று, ஆக்டிவா 6ஜியின் லிமிடெட் எடிசன் மற்றும் ஆக்டிவா 125 ஆகியவற்றின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முழுமையான விலை பட்டியலைக் கீழே காணலாம்:
- ஆக்டிவா 6ஜி எஸ்டிடி: புதிய விலை ரூ. 70,716 (பழைய விலை ரூ .69,479)
- ஆக்டிவா 6ஜி டிஎல்எக்ஸ்: புதிய விலை ரூ. 72,461 (பழைய விலை ரூ. 71,225)
- ஆக்டிவா 6ஜி லிமிடெட் எடிசன் எஸ்டிடி: புதிய விலை ரூ. 72,216 (பழைய விலை ரூ .70,979)
- ஆக்டிவா 6ஜி லிமிடெட் பதிப்பு டிஎல்எக்ஸ்: ரூ. 73,961 (பழைய விலை ரூ. 72,725)
- ஆக்டிவா 125 ஸ்டீல் / டிரம்: புதிய விலை ரூ. 75,084 (பழைய விலை ரூ. 74,120)
- ஆக்டிவா 125 அலாய் / டிரம்: புதிய விலை ரூ. 78,752 (பழைய விலை ரூ. 77,788)
- ஆக்டிவா 125 அலாய் / டிஸ்க்: புதிய விலை ரூ. 82,256 (பழைய விலை ரூ .81,293)
உற்பத்தி விலையுயர்வு காரணமாக இந்த விலையுயர்வைச் செய்து வருவதாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இதே காரணத்தைதான் ஹோண்டா நிறுவனமும் தெரிவித்திருக்கின்றது.
அப்டேட் (புதுப்பித்தல்) பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் விலையுயர்வைச் செய்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே, பெட்ரோல்-டீசல் விலையுயர்வு மக்களை வாட்டி வதைத்து வரும்நிலையில் புதிய வாகனங்களின் விலையும் உயர்ந்து வருவது மக்களை வேதனையில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் 109.51 சிசி திறனை வெளியேற்றக் கூடிய ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 7.68 பிஎச்பி மற்றும் 8.79 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.18 பிஎச்பி மற்றும் 10.3 என்எம் டார்க் ஆகியவற்றை வெளியேற்றும் திறன் கொண்டது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி