Just In
- 30 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
தண்டவாளத்தில் உசைன் போல்டாக மாறி குழந்தையை மீட்டெடுத்த மயூர் ஷெல்கேவிற்கு ஜாவா நிறுவனம் விலையுயர்ந்த பைக்கை பரிசாக வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
எதிரில் வருவது அதி-வேக ரயில் என்பது தெரிந்தும் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மீட்டெடுத்தவர் பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே. அந்த சமயத்தில் ஆபத்தில் இருந்த குழந்தையை மீட்க அவர் உசைன் போல்டாக மாறியிருந்தார்.
மின்னல் வேகத்தில் ஓடி சென்று குழந்தையை அவர் மீட்டெடுத்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போதும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வீர-தீர செயலைத் தொடர்ந்து பல தரப்பட்ட மக்கள் அவரை வாழ்த்து மற்றும் பாராட்டு மழையால் நனைத்து வருகின்றனர்.
மேலும், நாட்டு மக்களின் மனதில் ஒரே நாளில் அவர் ஹீரோவாகவே மாறிவிட்டார். இந்த நிலையில்தான், சமூக வலைதளங்களில் வாயிலாக மயூர் ஷெல்கேவின் அசாத்திய செயல்குறித்த வீடியோவைக் கண்டிருக்கின்றார் ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குனர் அருண் தரேஜா.
இதன் பின்னர் மயூர் ஷெல்கே கவுரவிக்கும் வகையில் புத்தம் புதிய ஜாவா பைக்கை பரிசாக வழங்க இருப்பதாக அவர் அறிவித்தார். ஏப்ரல் 21ம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டநிலையில், இன்று (ஏப்ரல் 23) மயூர் ஷெல்கேவிற்கு ஜாவா மோட்டார்சைக்கிள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ஜாவா மோட்டார்சைக்கிளையே நிறுவனம் மயூர் ஷெல்கேவிற்கு பரிசாக வழங்கியிருக்கின்றது. இந்த பைக் ரூ. 1,80,215 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதிக் கொண்ட மாடலின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதிக் கொண்ட ஜாவா ரூ. 1,89,157 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய விலையுயர்ந்த பைக்கையே ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மயூர் ஷெல்கேவிற்கு பரிசாக வழங்கியிருக்கின்றது. முன்னதாக, மயூர் ஷெல்கேவின் வீர-தீர செயலுக்கு பாராட்டு தெரிவித்து ரூ. 50,000 காசோலையை வழங்க இருப்பதாக ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கேவின் செயலுக்கு இது மிக மிக குறைந்த சன்மானம் என்ற கருத்து மக்கள் எழும்பியது. இந்த மாதிரியான சூழ்நிலையில் அரசு சார்பில் அறிவித்த தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிக மதிப்பிலான பரிசை ஜாவா வழங்கியிருக்கின்றது.
இது மயூர் ஷெல்கேவின் செயலுக்கு மேலும் மரியாதைச் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஜாவா நிறுவனம் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டு வருகின்றது. ஆகையால், இப்பரிசளிப்பு நிகழ்வில் மஹிந்திரா நிறுவனத்தின் பங்களிப்பும் உள்ளது.
மேலும், மயூர் ஷெல்கேவிற்கு ஜாவா மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி புத்தம் புதிய மஹிந்திரா தார் காரையும் மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் இதுகுறித்த தகவலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மஹிந்திரா நிறுவனம், அண்மையில் இந்திய கிரிக்கெட்டில் புதிதாக இணைந்து ஆஸ்திரேயாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய ஆறு இளம் வீரர்களுக்கு தார் எஸ்யூவி காரை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தகுந்தது. இக்காரை பரிசாக பெற்ற விளையாட்டு வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜனும் ஒருவர் என்பது கவனித்தக்கது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?