Just In
- 27 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 1 hr ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!
ஜாய் (Joy) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் & மோட்டார்சைக்கிள்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்திய சந்தையில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஜாய் இ-பைக் (Joy e-Bike) கடந்த ஆகஸ்ட்டில் மொத்த விற்பனையில் 2 ஆயிரத்தை முதன்முறையாக கடந்துள்ளது.
அதாவது இதற்கு முன் எந்தவொரு மாதத்திலும் இவ்வளவு எண்ணிக்கையில் ஜாய் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையானது இல்லை. கடந்த மாதத்தில் 2,001 யூனிட் வாகனங்களை விற்பனை செய்துள்ளதன் மூலமாக வருடம்-வருடம் ஒப்பீடுகையில் ஜாய் இ-பைக்கின் விற்பனை சுமார் 435% வளர்ச்சி கண்டுள்ளது.
ஏனெனில் 2020 ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 374 யூனிட் வாகனங்களையே இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதேபோல் 2021 ஜூலை மாதத்துடனான ஒப்பீடுகையிலும், கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை 112% உயர்வானது ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் 945 ஜாய் இ-பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.
இதில் இருந்து ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து ஓட்டுனர் உதவி வசதிகள் மற்றும் சவுகரிய அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் தேர்வாக மாறி வருவது தெரிய வருகிறது.
இந்தியாவில் ஜாய் இ-பைக் பிராண்டை வார்ட்விஸார்ட் கண்டுப்பிடிப்புகள் & மொபைலிட்டி லிமிடெட் (WardWizard Innovations and Mobility Ltd) என்ற நிறுவனம் சொந்தமாக கொண்டுள்ளது. இந்த வார்ட்விஸார்ட் நிறுவனத்திற்கு ஜாய் இ-பைக்குகளை நாடு முழுவதும் கொண்டுசென்று, அவற்றிற்கான வாடிக்கையாளர்களின் அடித்தளத்தை பெரிதாக்குவது மட்டுமே தற்போதைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு குறிப்பாக குஜராத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தான் ஜாய் எலக்ட்ரிக் 2 வீலர்ஸிற்கான முன்பதிவுகளும் குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு இந்திய மாநிலங்களில் அதிகமாக கிடைத்துள்ளன.
இதனாலேயே இந்த குறிப்பிட்ட மாநிலங்களில் டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜாய் இ-பைக் பிராண்டின் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக வரும் மாதங்களில் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனத்தின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதன்முறையாக அடைந்துள்ள 2,001 யூனிட்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக ஜாய் இ-பைக் பிராண்ட் கடுமையாக மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் விளைவாகும். ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பயன்பாடு ஒரு நிலையான வடிவத்தை பெற்று வருகிறது.
பெட்ரோலின் விலை ஒருபக்கம் அதிகரித்து வருவதால், எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. புதிய சாதனையாக 2,001 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது குறித்து வார்ட்விஸார்ட் கண்டுப்பிடிப்புகள் மற்றும் மொபைலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யடின் குப்தே கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் எங்களது முதன்மையான கவனம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருப்பை வலுப்படுத்துவதே ஆகும். எங்கள் டீலர்ஷிப்களில் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக முன்பதிவு ஆர்டர்களை பெற்றுள்ளோம்.
எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக மாறி வருவதால், வரவிருக்கும் பண்டிகை காலங்களில் மிக உயர்ந்த வளர்ச்சியை விற்பனையில் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார். இந்திய சந்தையில் தற்சமயம் 5 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.
குஜராத்தில் ஆழமாக கால்பதிக்க பணியாற்றிவரும் ஜாய் இ-பைக் பிராண்டின் 20 புதிய டீலர்ஷிப் மையங்கள் கடந்த சில வாரங்களாக குஜராத் மாநிலத்தில் திறக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் குஜராத்தில் ஜாய் இ-பைக்கின் டீலர்ஷிப்களின் 98ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமிலும் இரு டீலர்ஷிப் மையங்களை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வார்ட்விஸார்ட் நிறுவனம் திறந்துள்ளது.
இவ்வாறு பல எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் குஜராத்தை நாடி செல்வதற்கு காரணம், அம்மாநில அரசாங்கம் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்கப்படுத்த மானியங்களை அதிகமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும்.
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?