Just In
- 26 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 45 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரு ரவுண்டு தரீங்களா?.. பைக்கை பார்த்ததும் குழைந்தையாக மாறிய போலீஸ்... அப்படி என்ன பைக்குங்க அது?..
வாகன தணிக்கைக்காக மடக்கிய பைக்கை போலீஸார் ஒருவர் ஒரு ரவுண்டு ஓட்டிய விநோத சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
பைக்கையும், அதில் ரைடு (பயணம்) செய்வதையும் விரும்பாத நபர்களை தேடி பிடிப்பது கொஞ்சம் கஷ்டமே. அதிலும், சூப்பர் பைக்கை விரும்பாதவர்களைத் தேடி பிடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை பலர் சூப்பர் பைக்குகளுக்கு அடிமையாக (பிரியர்களாக) இருக்கின்றனர்.
இந்தியாவில் சூப்பர் பைக்குகள் பல லட்ச ரூபாயில் விற்கப்படுவதால் அடித்தட்டு மக்களின் எட்டாக் கனியாக அவை இருக்கின்றன. இருப்பினும், தங்களின் ஆசை எப்படியாவது நிறைவேறாத என்ற எண்ணம் அவர்களிடத்தில் இருந்த வண்ணம் இருக்கின்றது.
அந்தவகையில், சூப்பர் பைக்குகள் அதிக பிரியம் கொண்ட போலீஸாரே தனது ஆசையை வெளிப்படையாகக் கூறி சூப்பர் பைக்கில் ஒரு ரவுண்டு சென்று வந்திருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை இசட்900 ரைடர் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.
போலீஸ்காரர் ஓட்ட ஆசைப்பட்டது கவாஸாகி இசட்900 சூப்பர் பைக்காகும். இப்பைக்கை சாலையில் வைத்து மறைத்த காவலர் முதலில் பைக்குறித்து விசாரிக்க ஆரம்பித்தார். இதன் பின்னரே அவர் ஒரு ரவுண்டு கேட்டு ஓட்ட ஆரம்பித்திருக்கின்றார்.
நாடு முழுவதும் பல்வேறு தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு விதிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆகையால், காவலர்கள் தேவையற்ற போக்குவரத்துகளைக் குறைக்கும் விதமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
அவ்வாறு, வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே கவாஸாகி இசட்900 பைக்கை இடைமறைத்து விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர். முதலில் பைக்கரை முன்னேறி செல்வதற்கு அக்காவலர் அனுமதித்தார். ஆனால், திடீரென பைக் மீண்டும் மறைக்கப்பட்டது. இதனால், இருசக்கர வாகன ஓட்டி முதலில் குழப்பமடைந்தார்.
ஆனால், இதன் மறைப்பிற்கு பின்னரே அவர் பைக்குறித்த விசாரணையில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஒரு ரவுண்டும் அவர் வாங்கி ஓட்டினார். இந்த விநோத சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்திலேயே அரங்கேறியிருக்கின்றது. காவலர் ஓட்ட ஆசைப்பட்ட கவாஸாகி இசட்900 சூப்பர் பைக் இந்தியாவில் ரூ. 8,34,000 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
மேலே பார்த்தது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இப்பைக்கில் 948சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய லிக்யூடு கூல்டு இன்-லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 125 பிஎஸ் மற்றும் 98.6 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.
Image Courtesy: Z900 Rider
இப்பைக்கில், டிராக்சன் கன்ட்ரோல், பன்முக ரைடிங் மோட்கள், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது டுகாட்டி மான்ஸ்டர் 797 மற்றும் டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆகிய சூப்பர் பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கின்றது.