Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!
விலையுயர்ந்த பைக்கையும், அதன் உரிமையாளரையும் காவல்துறையினர் கொத்தாக தூக்கியிருக்கின்றனர். இதற்கு காரணம் இளைஞர் வெளியிட்ட வீடியோதான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு தகவலையும் கீழே காணலாம்.
அண்மைக் காலங்களாக இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விபத்துகளுக்கு வித்திடும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக விதிமீறல்கள் இருக்கின்றன. எனவேதான் இதனை முற்றிலும் ஒழித்துக்கட்டும் விதமாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறையினர் நாடு முழுவதிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர் ஒருவர்மீது போலீஸார் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
தலைநகர் டெல்லியில் உள்ள கிரிஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பேந்நதிர சிங். இவர் தற்போது நொய்டாவில் வசதித்து வருகின்றார். இவரே தனது இருசக்கர வாகனத்தை பொதுவெளியில் வாகன ஸ்டண்ட் ஈடுபட்டவர் ஆவார். வாகனம் மீதும், வாகனங்களை இயக்குவதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவரே புஷ்பேந்திர சிங். இதுமட்டுமின்றி, வாகனம் சார்ந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும் திறன் கொண்டவராகவும் இவர் இருக்கின்றார்.
அந்தவகையில், நொய்டாவின் முக்கியமான சாலைகளில் ஒன்றான செக்டார் 62 சாலையில் இவர் வீலிங் செய்து ஸ்டண்ட் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதனடிப்படையிலேயே காவல்துறையினர் புஷ்பேந்திர சிங்கை கைது செய்திருக்கின்றனர்.
பொதுவாக, வாகன ஸ்டண்டில் ஈடுபடுவதே குற்றம் என இந்திய போக்குவரத்து சட்டம் கூறுகின்றது. குறிப்பாக, பொது சாலையில் இது அறவே கூடாது என்பது முக்கிய விதியாகும். இவ்விரு விதிகளையும்தான் புஷ்பேந்திர சிங் உடைத்தெறிந்திருக்கின்றார். இதற்கான சன்மானமாக தற்போது வழக்கு பதிவு மற்றும் வாகன பறிமுதலை அவர் சந்தித்திருக்கின்றார்.
புஷ்பேந்திர சிங் பயன்படுத்தியது கேடிஎம் நிறுவனத்தின் விலையுயர்ந்த ட்யூக் பைக் என கூறப்படுகின்றது. ஸ்டண்டில் ஈடுபட்டதன் காரணத்தினால் இப்பைக்கையும் நொய்டா போலீஸார் தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர். புஷ்பேந்திர சிங் போலீஸாரிடத்தில் சிக்குவதற்கு முக்கிய காரணம் அவர் வெளியிட்ட வீடியோதான்.
ஆமாங்க, தனது ஸ்டண்ட்குறித்த காட்சிகளை புஷ்பேந்திர சிங், அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதே போலீஸாரிடத்தில் அவர் சிக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த வீடியோ அவரது நண்பர்கள் மற்றும் பிற நெட்டிசன்கள் வாயிலாக அதிகம் பகிரப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாநில காவல்துறையினர்களின் கண்களில் அடிப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே, பிற இளைஞர்கள் இதுமாதிரியான சாகச சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக, வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இளைஞரை போலீஸார் கைது செய்திருப்பதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.
கவனிக்க வேண்டயது.
பொதுசாலையில் இதுமாதிரியான ஸ்டண்டுகளில் ஈடுபடும்போதே போலீஸார் வாகன ஓட்டிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். அதேசமயம், அங்கீகரிக்கப்பட்ட ரேஸ் தளங்கள் மற்றும் பிற தனியார் பகுதிகளில் இதுமாதிரியான ஸ்டண்டுகளில் ஈடுபட தடையில்லை என்பது நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், பொதுவெளியில் நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!