Just In
- 33 min ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 54 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 1 hr ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Movies சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டில் செம மழைதான் போங்க
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!
விலையுயர்ந்த பைக்கையும், அதன் உரிமையாளரையும் காவல்துறையினர் கொத்தாக தூக்கியிருக்கின்றனர். இதற்கு காரணம் இளைஞர் வெளியிட்ட வீடியோதான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு தகவலையும் கீழே காணலாம்.
அண்மைக் காலங்களாக இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விபத்துகளுக்கு வித்திடும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக விதிமீறல்கள் இருக்கின்றன. எனவேதான் இதனை முற்றிலும் ஒழித்துக்கட்டும் விதமாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறையினர் நாடு முழுவதிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர் ஒருவர்மீது போலீஸார் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
தலைநகர் டெல்லியில் உள்ள கிரிஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பேந்நதிர சிங். இவர் தற்போது நொய்டாவில் வசதித்து வருகின்றார். இவரே தனது இருசக்கர வாகனத்தை பொதுவெளியில் வாகன ஸ்டண்ட் ஈடுபட்டவர் ஆவார். வாகனம் மீதும், வாகனங்களை இயக்குவதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவரே புஷ்பேந்திர சிங். இதுமட்டுமின்றி, வாகனம் சார்ந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும் திறன் கொண்டவராகவும் இவர் இருக்கின்றார்.
அந்தவகையில், நொய்டாவின் முக்கியமான சாலைகளில் ஒன்றான செக்டார் 62 சாலையில் இவர் வீலிங் செய்து ஸ்டண்ட் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதனடிப்படையிலேயே காவல்துறையினர் புஷ்பேந்திர சிங்கை கைது செய்திருக்கின்றனர்.
பொதுவாக, வாகன ஸ்டண்டில் ஈடுபடுவதே குற்றம் என இந்திய போக்குவரத்து சட்டம் கூறுகின்றது. குறிப்பாக, பொது சாலையில் இது அறவே கூடாது என்பது முக்கிய விதியாகும். இவ்விரு விதிகளையும்தான் புஷ்பேந்திர சிங் உடைத்தெறிந்திருக்கின்றார். இதற்கான சன்மானமாக தற்போது வழக்கு பதிவு மற்றும் வாகன பறிமுதலை அவர் சந்தித்திருக்கின்றார்.
புஷ்பேந்திர சிங் பயன்படுத்தியது கேடிஎம் நிறுவனத்தின் விலையுயர்ந்த ட்யூக் பைக் என கூறப்படுகின்றது. ஸ்டண்டில் ஈடுபட்டதன் காரணத்தினால் இப்பைக்கையும் நொய்டா போலீஸார் தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர். புஷ்பேந்திர சிங் போலீஸாரிடத்தில் சிக்குவதற்கு முக்கிய காரணம் அவர் வெளியிட்ட வீடியோதான்.
ஆமாங்க, தனது ஸ்டண்ட்குறித்த காட்சிகளை புஷ்பேந்திர சிங், அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதே போலீஸாரிடத்தில் அவர் சிக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த வீடியோ அவரது நண்பர்கள் மற்றும் பிற நெட்டிசன்கள் வாயிலாக அதிகம் பகிரப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாநில காவல்துறையினர்களின் கண்களில் அடிப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே, பிற இளைஞர்கள் இதுமாதிரியான சாகச சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக, வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இளைஞரை போலீஸார் கைது செய்திருப்பதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.
கவனிக்க வேண்டயது.
பொதுசாலையில் இதுமாதிரியான ஸ்டண்டுகளில் ஈடுபடும்போதே போலீஸார் வாகன ஓட்டிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். அதேசமயம், அங்கீகரிக்கப்பட்ட ரேஸ் தளங்கள் மற்றும் பிற தனியார் பகுதிகளில் இதுமாதிரியான ஸ்டண்டுகளில் ஈடுபட தடையில்லை என்பது நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், பொதுவெளியில் நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!