Just In
- 4 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 52 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 3 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
2 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!
3,000 ரோபோக்கள், 10,000 தொழிலாளர்கள் மற்றும் 1,000 எஞ்சினியர்களுடன் இரண்டு வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் திறனுடன் ஓலாவின் ஓசூர் ஆலை மிக பிரம்மாண்டமாக செயல்பட உள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் கிடுகிடுக்க வைக்கும் திட்டத்துடன் ஓலா நிறுவனம் கங்கணம் கட்டி இறங்கி உள்ளது. புத்தாண்டில் ஓசூரில் ஆலை அமைப்பதற்கான இடத்தை கையகப்படுத்திய நிலையில், பிப்ரவரி மாத துவக்கத்தில் ஆலை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையாக அமைக்கப்படும் இந்த ஆலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்த வீடியோ ஒன்றை ஓலா பகிர்ந்து கொண்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் இந்த கனவு ஆலையானது நனவாக இருக்கிறது. ரூ.2,400 கோடி முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. இதில், 50 சதவீதம் அளவுக்கு உதிரிபாக சப்ளையர்களின் உற்பத்தி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இந்த ஆலை வளாகத்தை மிகவும் இயற்கை சூழல் மிகுந்ததாகவும் உருவாக்குவதற்கு ஓலா முடிவு செய்துள்ளது. இதனால், பசுமை வளாகத்துடன் இந்த ஆலை செயல்பட உள்ளது.
அடுத்த சில மாதங்களில் இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கும் ஓலா திட்டமிட்டுள்ளது. இதற்காக, மிக விரிவானத் திட்டத்துடன் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
ஆண்டுக்கு 10 மில்லியன் மின்சார இருசக்கர வாகனங்களை இந்த ஆலையில் உற்பத்தி செய்யவும் ஓலா திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, உலக அளவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தனது மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது.
இந்த ஆலையில் மின்சார இருசக்கர வாகன உற்பத்திப் பணிகளுக்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 3,000 ரோபோக்களும், 10,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். ரோபோக்களை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக சாஃப்ட்வேரை 1,000 எஞ்சினியர்கள் குழு மூலமாக கட்டுப்படுத்தப்படும்.
ஓசூரில் அமைக்கப்படும் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தொழிற்சாலை எப்படி இருக்கும் என்பதை அனிமேஷன் வடிவில் வீடியோவாக ஓலா வெளியிட்டுள்ளது. அதனை இந்த ஸ்லைடில் பார்க்கலாம்.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!