Just In
- 2 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 4 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 9 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 11 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
Don't Miss!
- News சென்னைக்கு நிகராக.. ஓசூர், பெருந்துறை, கோவை, தூத்துக்குடியில் நடக்கும் சம்பவம்.. மாஸ் தொழிற்புரட்சி
- Finance குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்.. டிக்டாக்-ஐ தடை செய்த அடுத்த முக்கிய நாடு..!
- Lifestyle சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
- Movies பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்?.. அவரே கொடுத்த தரமான பதிலடி
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரபல நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்த ஓலா... தமிழகத்தில் அமைய இருக்கும் மிகப்பெரிய உற்பத்தி ஆலைக்காக அதிரடி!!
தமிழகத்தில் அமைய இருக்கும் மிகப்பெரிய உற்பத்தி ஆலைக்காக ஓலா நிறுவனம் பிரபல நிறுவனம் ஒன்றுடன் கூட்டணி சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
நாட்டின் முன்னணி கால் டாக்சி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓலா விரைவில் மின்வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்வதற்காக சீமென்ஸ் (Siemens) நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றது.
இவர்கள் இருவரும் இணைந்தே நாட்டில் மிக அட்வான்ஸான மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கின்றனர். ஓலா நிறுவனத்தின் இந்த மின் வாகன உற்பத்தி ஆலை தமிழகத்திலேயே அமைய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை ஓலா மற்றும் தமிழக அரசு ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இந்த ஆலை தமிழகத்தில் அமைய இருப்பதால் சுமார் 10 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே ஓலா மற்றும் சீமென்ஸ் நிறுவனங்களின் கூட்டணி தொடங்கியிருக்கின்றது. இவர்கள் இருவரும் இணைந்து ஆண்டு ஒன்றிற்கு சுமார் 2 மில்லியன் அலகு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யுமளவிலான தயாரிப்பு ஆலையை கட்டமைக்க இருக்கின்றனர். நவீன வசதிகளுடன் இந்த ஆலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஓலா சீமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றது.
இந்த உற்பத்தி ஆலையில் பணியாளர்கள் மட்டுமின்றி 5 ஆயிரம் ரோபோக்களும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஆகையால், உலக தரத்திலான மின்சார இருசக்கர வாகனங்களை ஓலா இந்தியாவில் தயாரிக்கும் என்பது எந்தவித சந்தேகமுமின்றி தெரிகின்றது. அதேசமயம், உலக நாடுகளுக்கு தேவையான மின் வாகனங்களை இங்கிருந்தே ஓலா உற்பத்தி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோபோக்கள் மற்றும் டிஜிட்டல் வடிவமைப்பு ஆகியவற்றைச் செய்யக் கூடிய கருவிகளையே சீமென்ஸ் உருவாக்கி தர இருக்கின்றது. ஆகையால், இந்த ஆலையில் பல்வேறு பணிகள் டிஜிட்டல் முறையிலேயே நடைபெறும் என்பதும் தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.
ஓலா மின்சார ஸ்கூட்டர்:
நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த எடர்கோ மின்வாகன நிறுவனத்தை கையகப்படுத்தியதைத் தொடர்ந்தே இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உலகளவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது. எடர்கோவின் பிரபல மாடல்களில் ஒன்றான ஆப்ஸ்கூட்டர் எனும் மின்சார ஸ்கூட்டரையே அது முதலில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
இந்த மின்சார ஸ்கூட்டரில் ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி, ஜியோ ஃபென்சிங், 7 இன்ச் அளவிலான தொடுதிரை (அழைப்புகளை ஏற்கும் மற்றும் குறுஞ்செய்தியை படிக்கும் வசதிகளைக் கொண்டது) என பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலையும் மிக குறைவாகவே எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதுவரை இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் என்ன ரேஞ்ஜை வெளிப்படுத்தும் என்ற தகவலை ஓலா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.