Just In
- 35 min ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 1 hr ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 3 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 4 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜூனில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகிறது... விலை மிக சவாலாக இருக்கும்!
இன்னும் இரண்டு மாதங்களில் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனை ஓலா நிறுவனத்தின் ஸ்தாபகர் பவிஷ் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், விலையும் அசர வைக்கும் வகையில் இருக்கும் என்று அவர் கூறி இருக்கிறார்.
ஓலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்லோரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. அசத்தும் தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக சவாலான விலையில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், ஓசூரில் ஓலா நிறுவனத்தின் பெருந்திட்ட வளாகத்தில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்னும் இரண்டு மாதங்களில் வருவதற்கான வாய்ப்பு இருப்பதை அந்நிறுவனத்தின் ஸ்தாபகர் பவிஷ் அகர்வால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,"மாசு உமிழ்வு இல்லாத சூழலை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக எங்களது திட்டம் அமைந்துள்ளது. பெட்ரோல் இருசக்கர வாகனங்களில் இருந்து விரைவாக மின்சார வாகனங்களுக்கு வாடிக்கையாளர்களை இழுக்கும் வகையில் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறோம்.
எங்களது ஓசூர் தொழிற்சாலையின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் வரும் ஜூனில் நிறைவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆலை பணிகள் நிறைவு பெறும்போது, முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளோம்.
எங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே அசெம்பிள் செய்யப்பட்டு சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிற்சாலையில் உற்பத்தி துவங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்ட உடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
எங்களது ஸ்கூட்டருக்கான பேட்டரி, மின் மோட்டார், பேட்டரி மேலாண்மைக்கான மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் இதர செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை சொந்தமாகவே உருவாக்கி இருக்கிறோம். எனவே, உற்பத்தி செலவு குறைவாக இருக்கும் என்பதால், விலையை மிக சவாலாக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளோம்.
எங்களது தயாரிப்பு சந்தையில் 'டாப் க்ளாஸ்' அம்சங்களை பெற்று இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம். இது நிச்சயம் பெரிய அளவிலான வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்.
இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் எங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஓரிரு மாதங்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் பணிகள் துவங்கும். அடுத்த ஆண்டு மத்தியில் ஓசூர் தொழிற்சாலையில் முழு அளவிலான உற்பத்திப் பணிகள் நடைபெறும்.