Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே புக்கிங் நிறுத்தம்! ரிவோல்ட் அதிரடி! இதற்கான காரணம் தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க
அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே புக்கிங்கை ரிவோல்ட் நிறுவனம் நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் மக்கள் பலர் மிகக் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை புதிய வாகன விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கு நிலவிய மாதத்தில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள்கூட விற்பனை இலக்கை எட்ட முடியாமல் தவித்தன. மிகக் கடுமையாக விற்பனை சரிவையும் அவைச் சந்தித்தன.
இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையை இந்திய வாகன சந்தை சந்தித்து வரும்நிலையில், ரிவோல்ட் மோட்டார்ஸ் அதன் புகழ்வாய்ந்த மின்சார இருசக்கர வாகனமான ஆர்வி400 மாடலுக்கான புக்கிங்கைத் தொடங்கியது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே நிறுவனம் மின்சார பைக்கிற்கான புக்கிங்கை நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு அதிகளவில் புக்கிங் கிடைத்ததே காரணம் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆமாங்க, விற்பனைக்காக நிறுவனம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து யூனிட்டுகளுக்கும் 2 மணி நேரங்களுக்கு உள்ளாகவே புக்கிங் கிடைத்திருக்கின்றது.
இந்த அமோக வரவேற்பை அடுத்தே ரிவோல்ட் ஆர்வி 400 மின்சார பைக்கிற்கான புக்கிங் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஃபேம்2 திட்டத்தின்கீழ் வழங்கும் மானியத்தை அதிகரிக்கச் செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனால், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலையும் கணிசமாக சமீபத்தில் குறைக்கப்பட்டது. அதாவது, ரூ. 28 ஆயிரம் வரை எலெக்ட்ரிக் பைக்கின் விலை குறைக்கப்பட்டது.
ஆகையால், தற்போது ரிவோல்ட் ஆர்வி 400 ரூ. 91 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதுவும், பைக்கிற்கு அமோகமான வரவேற்பு கிடைக்க ஓர் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக ரிவோல்ட் ஆர்வி ரூ. 1.19 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.
நடப்பு வாரத்தின் தொடக்கத்தில் ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 ஆகிய இரு மின்சார மோட்டார்சைக்கிளுக்கும் மீண்டும் புக்கிங் தொடங்கப்படும் என்றும் ஏற்கனவே புக்கிங் செய்தவர்களுக்கு மின்சார பைக்கை டெலிவரி செய்யும் பணியை துரிதப்படுத்த இருப்பதாகவும் அறிவித்தது. இதனடிப்படையில், முன்பதிவுகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இது தொடங்கப்பட்ட 2 மணி நேரங்களுக்கு உள்ளாகவே முடிவடைந்துள்ளது. ஆன்லைன் வாயிலாகவே அனைத்து மின்சார மோட்டார்சைக்கிளுக்கமான புக்கிங்கும் கிடைத்திருக்கின்றது. தற்போது கிடைத்திருக்கும் ஒட்டுமொத்த புக்கிங்கின் மதிப்பு ரூ. 50 கோடி ஆகும். இதுகுறித்த தகவலை நிறுவனம் அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது.
தற்போது ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், சென்னை, புனே, மும்பை, டெல்லி, அஹமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைத்து வருகிறது.
தற்போது புக்கிங் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மின்சார பைக்கை டெலிவரி வழங்கப்பட இருப்பதாக ரிவோல் அறிவித்துள்ளது. எப்போது டெலிவரி வழங்கப்படும் என்கிற தகவலை அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளப்பக்கத்தின் வாயிலாக வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?