Just In
- 18 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 37 min ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே புக்கிங் நிறுத்தம்! ரிவோல்ட் அதிரடி! இதற்கான காரணம் தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க
அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே புக்கிங்கை ரிவோல்ட் நிறுவனம் நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் மக்கள் பலர் மிகக் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை புதிய வாகன விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கு நிலவிய மாதத்தில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள்கூட விற்பனை இலக்கை எட்ட முடியாமல் தவித்தன. மிகக் கடுமையாக விற்பனை சரிவையும் அவைச் சந்தித்தன.
இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையை இந்திய வாகன சந்தை சந்தித்து வரும்நிலையில், ரிவோல்ட் மோட்டார்ஸ் அதன் புகழ்வாய்ந்த மின்சார இருசக்கர வாகனமான ஆர்வி400 மாடலுக்கான புக்கிங்கைத் தொடங்கியது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே நிறுவனம் மின்சார பைக்கிற்கான புக்கிங்கை நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு அதிகளவில் புக்கிங் கிடைத்ததே காரணம் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆமாங்க, விற்பனைக்காக நிறுவனம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து யூனிட்டுகளுக்கும் 2 மணி நேரங்களுக்கு உள்ளாகவே புக்கிங் கிடைத்திருக்கின்றது.
இந்த அமோக வரவேற்பை அடுத்தே ரிவோல்ட் ஆர்வி 400 மின்சார பைக்கிற்கான புக்கிங் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஃபேம்2 திட்டத்தின்கீழ் வழங்கும் மானியத்தை அதிகரிக்கச் செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனால், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலையும் கணிசமாக சமீபத்தில் குறைக்கப்பட்டது. அதாவது, ரூ. 28 ஆயிரம் வரை எலெக்ட்ரிக் பைக்கின் விலை குறைக்கப்பட்டது.
ஆகையால், தற்போது ரிவோல்ட் ஆர்வி 400 ரூ. 91 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதுவும், பைக்கிற்கு அமோகமான வரவேற்பு கிடைக்க ஓர் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக ரிவோல்ட் ஆர்வி ரூ. 1.19 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.
நடப்பு வாரத்தின் தொடக்கத்தில் ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 ஆகிய இரு மின்சார மோட்டார்சைக்கிளுக்கும் மீண்டும் புக்கிங் தொடங்கப்படும் என்றும் ஏற்கனவே புக்கிங் செய்தவர்களுக்கு மின்சார பைக்கை டெலிவரி செய்யும் பணியை துரிதப்படுத்த இருப்பதாகவும் அறிவித்தது. இதனடிப்படையில், முன்பதிவுகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இது தொடங்கப்பட்ட 2 மணி நேரங்களுக்கு உள்ளாகவே முடிவடைந்துள்ளது. ஆன்லைன் வாயிலாகவே அனைத்து மின்சார மோட்டார்சைக்கிளுக்கமான புக்கிங்கும் கிடைத்திருக்கின்றது. தற்போது கிடைத்திருக்கும் ஒட்டுமொத்த புக்கிங்கின் மதிப்பு ரூ. 50 கோடி ஆகும். இதுகுறித்த தகவலை நிறுவனம் அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது.
தற்போது ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், சென்னை, புனே, மும்பை, டெல்லி, அஹமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைத்து வருகிறது.
தற்போது புக்கிங் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மின்சார பைக்கை டெலிவரி வழங்கப்பட இருப்பதாக ரிவோல் அறிவித்துள்ளது. எப்போது டெலிவரி வழங்கப்படும் என்கிற தகவலை அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளப்பக்கத்தின் வாயிலாக வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!