Just In
- 1 hr ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 6 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 6 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
- 7 hrs ago ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
Don't Miss!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Finance மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - வைப்புநிதி திட்டம்: எதில் அதிக வரி சலுகை பெற முடியும்?
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
பெங்களூருவில் இருந்து உத்தரகாண்ட் வரையிலான மீட்டியோர் மோட்டார்சைக்கிள் பயணத்திற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ராயல் என்பீல்டு மீட்டியோர் பைக்கில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த நீண்ட தூர மோட்டார்சைக்கிள் பயணத்தை பெங்களூரை சேர்ந்த 34 வயதான அர்ச்சனா திம்மராஜூ என்பவர் மேற்கொண்டுள்ளார்.
செவித்திறன் குறைப்பாடுள்ளவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதும், ஆராய்வதும் மற்றும் பல்வேறு வகையான தொடர்புகளை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாக கொண்டு இந்த மோட்டார்சைக்கிள் பயணத்தை அர்ச்சனா திம்மராஜூ துவங்கியுள்ளார்.
மோட்டார்சைக்கிள் பயணத்தை பலர் பல்வேறு காரணங்களுடன் அவ்வப்போது துவங்கி வருகின்றனர். சிலர் பொழுதுப்போக்கிற்காகவும், சிலர் அமைதிக்காகவும் இவ்வாறான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
அதேநேரம் அர்ச்சனா திம்மராஜூ போல் சிலர் விழிப்புணர்வுகளை முன் வைத்து மோட்டார்சைக்கிளில் பல்வேறு பகுதிகளுக்கு பயணங்களை துவங்குகின்றனர். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், அர்ச்சனா திம்மராஜூ செவித்திறன் குறைப்பாடு உள்ளவர்.
குறைப்பாடுள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்தும் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனமான சைலண்ட் எக்ஸ்பெடிஷனின் (Silent Expedition) நிறுவனத்தின் துணை நிறுவனர் இவர்.
சைலண்ட் எக்ஸ்பெடிஷன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நோக்கம், செவித்திறன் குறைப்பாடுள்ளவர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதும், அவர்களின் திறன்களையும் சாத்தியங்களையும் ஆராய்வதுமாகவே உள்ளது.
செவித்திறன் குறைப்பாடுள்ள மோட்டார்சைக்கிளிஸ்ட்டாக இருக்கும் அர்ச்சனா ஆரம்ப காலத்தில் மோட்டார்சைக்கிள் பயணங்களின்போது எதிர்கொண்ட சிரமங்களை நன்கு அறிவார். இந்த அனுபவங்களை வைத்துதான் உத்தரகாண்ட் வரையில் பயணம் செய்ய முடிவு செய்தார்.
செவித்திறன் குறைப்பாடு உள்ளவர்களின் மொழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பயணத்தில் இடையிடையே நிறுத்தங்களை திட்டமிட்டுள்ளார். அர்ச்சனா திம்மராஜூவின் பயணத்திற்கு மீட்டியோர் 350 பைக்கை கொடுத்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஆதரவளித்துள்ளது.
ராயல் என்பீல்டின் ‘ஜே சீரிஸ்' ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் பைக்கான மீட்டியோர் 350 பைக்கில் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஒரு காரணத்திற்காக சவாரி செய்வது வேறு எந்த வகையான சவாரிகளையும் விட எப்போதும் உன்னதமானது.
அதிலும் அர்ச்சனா அவர்கள் மற்ற மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களுக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்ய இந்த நீண்ட தூர பயணத்தில் ஈடுப்பட்டுள்ளார். இது அவரது பயணத்திற்கான காரணத்தை மட்டுமின்றி செவித்திறன் குறைப்பாடு உள்ளவர்களையும் சிறப்பானவர்களாக காட்டும்.
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!