Just In
- 4 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 56 min ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
பெங்களூருவில் இருந்து உத்தரகாண்ட் வரையிலான மீட்டியோர் மோட்டார்சைக்கிள் பயணத்திற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ராயல் என்பீல்டு மீட்டியோர் பைக்கில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த நீண்ட தூர மோட்டார்சைக்கிள் பயணத்தை பெங்களூரை சேர்ந்த 34 வயதான அர்ச்சனா திம்மராஜூ என்பவர் மேற்கொண்டுள்ளார்.
செவித்திறன் குறைப்பாடுள்ளவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதும், ஆராய்வதும் மற்றும் பல்வேறு வகையான தொடர்புகளை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாக கொண்டு இந்த மோட்டார்சைக்கிள் பயணத்தை அர்ச்சனா திம்மராஜூ துவங்கியுள்ளார்.
மோட்டார்சைக்கிள் பயணத்தை பலர் பல்வேறு காரணங்களுடன் அவ்வப்போது துவங்கி வருகின்றனர். சிலர் பொழுதுப்போக்கிற்காகவும், சிலர் அமைதிக்காகவும் இவ்வாறான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
அதேநேரம் அர்ச்சனா திம்மராஜூ போல் சிலர் விழிப்புணர்வுகளை முன் வைத்து மோட்டார்சைக்கிளில் பல்வேறு பகுதிகளுக்கு பயணங்களை துவங்குகின்றனர். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், அர்ச்சனா திம்மராஜூ செவித்திறன் குறைப்பாடு உள்ளவர்.
குறைப்பாடுள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்தும் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனமான சைலண்ட் எக்ஸ்பெடிஷனின் (Silent Expedition) நிறுவனத்தின் துணை நிறுவனர் இவர்.
சைலண்ட் எக்ஸ்பெடிஷன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நோக்கம், செவித்திறன் குறைப்பாடுள்ளவர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதும், அவர்களின் திறன்களையும் சாத்தியங்களையும் ஆராய்வதுமாகவே உள்ளது.
செவித்திறன் குறைப்பாடுள்ள மோட்டார்சைக்கிளிஸ்ட்டாக இருக்கும் அர்ச்சனா ஆரம்ப காலத்தில் மோட்டார்சைக்கிள் பயணங்களின்போது எதிர்கொண்ட சிரமங்களை நன்கு அறிவார். இந்த அனுபவங்களை வைத்துதான் உத்தரகாண்ட் வரையில் பயணம் செய்ய முடிவு செய்தார்.
செவித்திறன் குறைப்பாடு உள்ளவர்களின் மொழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பயணத்தில் இடையிடையே நிறுத்தங்களை திட்டமிட்டுள்ளார். அர்ச்சனா திம்மராஜூவின் பயணத்திற்கு மீட்டியோர் 350 பைக்கை கொடுத்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஆதரவளித்துள்ளது.
ராயல் என்பீல்டின் ‘ஜே சீரிஸ்' ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் பைக்கான மீட்டியோர் 350 பைக்கில் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஒரு காரணத்திற்காக சவாரி செய்வது வேறு எந்த வகையான சவாரிகளையும் விட எப்போதும் உன்னதமானது.
அதிலும் அர்ச்சனா அவர்கள் மற்ற மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களுக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்ய இந்த நீண்ட தூர பயணத்தில் ஈடுப்பட்டுள்ளார். இது அவரது பயணத்திற்கான காரணத்தை மட்டுமின்றி செவித்திறன் குறைப்பாடு உள்ளவர்களையும் சிறப்பானவர்களாக காட்டும்.
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!