Just In
- 47 min ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 1 hr ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 1 hr ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 2 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழகத்தில் ரூ.1200 கோடி முதலீடு செய்யும் டிவிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!
பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் தமிழகத்தில் புதிய தொழிலுக்காக 1,200 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.
உலகின் மிகப் பெரிய இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனம், மிக விரைவில் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகனமாக மாறும் முயற்சியில் தற்போது களமிறங்கியிருக்கின்றது.
நிறுவனம், தற்போது டிவிஎஸ் ஐக்யூப் பிரீமியம் தர மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையில், தனது இருசக்கர வாகன உற்பத்தியை மிகப் பெரிய அளவில் விரிவுப்படுத்த இருப்பதாக நிறுவனம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்காக டிவிஎஸ் நிறுவனம் ரூ. 1,200 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனங்களில் முதலீடு செய்யும் பொருட்டு இந்த பெரும் தொகையை நிறுவனம் ஒதுக்கியிருக்கின்றது. இந்த முதலீடும் தமிழகத்திலேயே செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (நவம்பர் 23) கையெழுத்திடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2021இல் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணவர்வு ஒப்பந்தம் மாநிலத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளில் எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும். ஏற்கனவே தமிழகத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் மின் வாகன உற்பத்தியைத் தொடங்கியிருக்கின்றது. இத்துடன், இன்னும் சில ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பணிகளைத் தொடங்கி வருகின்றன.
இந்த மாதிரியான சூழ்நிலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் மாநிலத்தை மையமாகக் கொண்டு மின்சார வாகன உற்பத்தியை தொடங்க இருக்கின்றது. இந்த நிலை மின் வாகன உற்பத்தியின் மையப் புள்ளியாக தமிழகத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது.
தொடர்ந்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கான
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தொடர் அர்ப்பணிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த முதலீடு அமைந்திருக்கின்றது. மேலும், நிறுவனம் மின் வாகன உற்பத்தியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதையும் இந்த முதலீடு உறுதி செய்கின்றது.
நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதை உணர்ந்து முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தொடங்கி ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரை இந்தியாவில் புதுமுக மின்சார வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றன.
பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போகூட இந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்க இருப்பதாக மிக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையை மிக வேகமாக வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த மாதிரியான செயல்களில் வாகன உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் மின் வாகன தாகத்தை தீர்த்து வைக்கும் வகையில் பிரீமியம் தர எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஐக்யூப்-ஐ விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதன் விலை ரூ. 1,15,218 ஆகும். அட்வான்ஸ்ட் எலெக்ட்ரிக் டிரைவ்ட்ரெயின் சிஸ்டத்துடன் இந்த ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.
4.4 கிலோவாட்ஸ் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது உச்சபட்சமாக மணிக்கு 78 கிமீ எனம் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இத்துடன் ஒரு முழுமையான சார்ஜில் 75 கிமீ ரேஞ்ஜை தரக்கூடிய பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரங்கள் தேவைப்படும். வழக்கமான பிளக் பாயிண்டு வைத்து சார்ஜ் செய்யும்போதே இந்த அதிகபட்ச நேரத்து அது எடுத்துக் கொள்கின்றது. மிக வேகமாக சார்ஜாக அதிவேக சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!