Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!
இந்தியாவின் மலிவு விலை மின்சார காரில் வந்த காவலர்கள் யமஹா ஆர்15 பைக் ரைடருக்கு ஆயிரம் ரூபாவுக்கான அபராத செல்லாணை வழங்கிய சம்பவம் இருசக்கர வாகன ஓட்டிகள் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த (மலிவு) விலை மின்சார காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விளங்குகின்றது. இந்த காரையே கேரள மோட்டார் வாகனத்துறை பயன்படுத்தி வருகின்றது. மேலும், இதைக் கொண்ட மாநிலத்தில் அரங்கேறும் வாகனங்கள் சார்ந்த விதிமீறல்கள் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பணியில் அத்துறை ஈடுபட்டு வருகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அண்மைக் காலங்களாக நாடு முழுவதும் விதிமீறல்கள் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து மாநில மோட்டார் வாகனத் துறையினரும் மிகக் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், கேரள மோட்டார் வாகனத்துறையினர் சற்று அதிரடியானதாக இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தற்போதைய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இருசக்கர வாகனத்தில் மட்குவார்ட் இல்லாத காரணத்திற்கு ரூ. 1000 உச்சபட்ச அபராதத்தை கேரள மோட்டார் வாகனத்துறை காவல்துறை வழங்கியிருக்கின்றது.
போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாடிஃபிகேஷன் பிரியர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. மட்குவார்ட் இல்லாததற்கு ஆயிரம் ரூபா அபராதமா என்ற பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது.
டயர்களில் சிக்கி தூக்கி எரியப்படும் மண் மற்றும் கல் துகள்களை தடுப்பதே மட்டுகுவார்டின் முக்கிய பணியாகும். இத்தகைய முக்கிய அம்சத்தை நீக்குவதனால் குறிப்பிட்ட அப்பைக்கின் பின்னால் வரும் பிற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். சில நேரங்களில் மண் மற்றும் சிறிய கற் துகள்களால் பார்வையை இழந்த சம்பவங்கள்கூட அரங்கேறியிருக்கின்றன.
இதை உணராமல் சில இளைஞர்கள் மட்டுகுவார்டை கழட்டி எறிந்துவிடுகின்றனர். இதுவும், ஓர் வகையான வாகன மாடிஃபிகேஷனே. எனவேதான், யமஹா ஆர்15 பைக்கிற்கு உடனடியாக சம்பவ இடத்திலேயே ரூ. 1,000த்திற்கான அபராத செல்லாணை போலீஸார் வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவை ஜித்தோஸ் டெமோன் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.
கேரள மோட்டார் வாகனத்துறையினர் பயன்படுத்தி வரும் டாடா நெக்ஸான் இவி இந்தியாவில் ரூ. 13,99,000 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். டாடா நெக்ஸான் இவி மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
அவை எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகியவை ஆகும். டாடா நெக்ஸான் இவி காரை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்தால் வெறும் 60 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜாகிவடும். அதுவே, வழக்கமான பிளக்குகளில் வைத்து சார்ஜ் செய்தால் 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 8.5 மணி நேரங்கள் ஆகும்.
மின்சார காரில் ஐபி67 சான்று கொண்ட பேட்டரி மற்றும் மின் மோட்டார்களையே டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தியுள்ளது. மேலும், இக்காரை அதிக பாதுகாப்பு திறன் கொண்ட நெக்ஸான் (ஐசிஇ) கார்களை தயாரிக்கும் அதே பிளாட்பாரத்தில் வைத்து தயாரித்து வருகின்றது. ஆகையால், இதில் பாதுகாப்பு வசதிக்கு குறைச்சலின்றி காணப்படுகின்றது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!