Just In
- 42 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 50 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...
பிரபல சாப்பாடு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ இந்தியர்களுக்கு ஓர் வாக்குறுதியை அளித்துள்ளது. அதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.
பிரபல சாப்பாடு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, தற்போது வரை அதன் டெலிவரி சேவையில் பெரும்பாலும் பெட்ரோலால் இயங்கும் வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றது. இந்த நிலையை மாற்றும் வகையில் ஓர் அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது நிறுவனம் 100 சதவீதம் மின்வாகனம் பயன்பாட்டிற்கு மாற்றப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உற்ற நண்பனாக செயல்படும் திறன்கொண்டவை மின் வாகனங்கள். இவை துளியளவும் காற்றை மாசுபடுத்தும் உமிழ்வுகளை வெளியேற்றாது.
மேலும், பெட்ரோல்-டீசல் விலையுயர்வில் இருந்தும் பாக்கெட்டைக் காப்பாற்ற உதவும். இதுமாதிரியான காரணங்களுக்கு மக்கள் பலர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், தங்களின் பங்காக சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் முழுக்க முழுக்க மின்சார வாகனங்களை மட்டுமே தங்களின் டெலிவரி சேவையில் பயன்படுத்த இருக்கின்றோம் என சொமேட்டா அறிவித்துள்ளது.
இன்னும் 9 ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டுவிடும் என்ற கால இலக்கையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதாவது, 2030ம் ஆண்டிற்குள் அனைத்து எரிபொருள் வாகனங்களும் நீக்கப்பட்டு மின் வாகனங்கள் மட்டும் பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தீபீந்தர் கோயல் கூறியதாவது, "100% மின்சார வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் இது அவசியம். கொரோனா இக்கட்டான சூழ்நிலையால் மின்வாகனங்களை தத்தெடுக்கும் விகிதம் லேசாக குறைந்திருக்கின்றது" என்றார்.
தற்போது, டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் குறைந்தளவில் மின்சார வாகனங்கள் களமிறக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருக்கின்றன என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிக சிறிய பகுதியே என கூறியிருக்கும் நிறுவனம், வரும் 2030ம் ஆண்டிற்குள் நூறு சதவீதம் மின்சார வாகனங்களை தத்தெடுக்க இருப்பதாகக் கூறியிருக்கின்றது.
நாடு முழுவதும் தற்போது வரை மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி தட்டுப்பாடுடன் காட்சியளிக்கின்றது. மின் வாகன விற்பனை இந்தியாவில் சற்றே வளர்ச்சியடைந்து தென்பட்டாலும், அது தற்போதும் குழந்தை பருவத்திலேயே இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இதற்கு போதியளவு சார்ஜிங் மையங்கள் இல்லாததே முக்கிய காரணம் ஆகும்.
இந்த நிலையைக் கலைக்கும் முயற்சியில் அரசும் சில தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆகையால், நாட்டில் மின் வாகன பயன்பாடு பெருமளவில் உயரும் என நம்பப்படுகின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே மிக குறைந்த வேகத்தில் மின் வாகனங்களை தத்தெடுத்து வருவதாக சொமேட்டோ தெரிவித்திருக்கின்றது. இருப்பினும், மிக விரைவில் இதன் அதிகரிக்கப்பட்டு இலக்கு வருவதற்குள் லட்சியம் நிறை வேற்றப்படும் எனவும் அது கூறியுள்ளது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!