Just In
- 28 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 47 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் 1,000 ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் முழுவதும் 1,000 ஃபாஸ்ட் சார்ஜர்களை பொருத்துவதற்காக அம்மாநில அரசும், ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கவுள்ளது. அத்துடன் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதையும் இது ஊக்குவிக்கும்.
நமது எதிர்கால போக்குவரத்து எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ந்துதான் இருக்க போகிறது என்பதை தற்போது அனைவரும் உணர தொடங்கி விட்டனர். அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு ஆகிய பிரச்னைகளும் மக்களின் கவனத்தை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி வேகமாக திருப்பி வருகின்றன.
ஆனால் இன்னமும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம் ரேஞ்ச் தொடர்பாக உள்ள பதற்றம்தான். தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் ஓரளவிற்கு மட்டுமே இருக்கிறது. போதாக்குறைக்கு மக்களுக்கு கிடைக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையும் வேறு மிகவும் குறைவாக இருக்கிறது.
ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்தால் பெரும் அளவிலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவர். எனவே அரசும், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றன. இதன்படிதான் கர்நாடக மாநில அரசும், ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் தற்போது கைகோர்த்துள்ளன.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி மாறியுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) முறையான ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக பார்க்கப்படுகிறது.
இதன் செயல்திறன் மற்றும் டிசைன் என பல்வேறு அம்சங்களும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்லாது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது சொந்த சார்ஜர் மற்றும் சார்ஜிங் க்ரிட் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சிறிய சார்ஜரை விற்பனை செய்து வருகிறது.
இதனை வாடிக்கையாளர்களின் இல்லங்களில் பொருத்தி கொள்ள முடியும். அதேபோல் ஃபாஸ்ட் சார்ஜரையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சொந்த சார்ஜிங் நெட்வொர்க்தான் ஏத்தர் க்ரிட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சார்ஜர்கள் டிசைன், பாதுகாப்பு, செயல்திறன் என அனைத்திலும் தலைசிறந்து விளங்குகின்றன.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது எஸ்காம்ஸ் (ESCOMs - Electricity Supply Companies of Karnataka) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த நிறுவனம்தான் மின்சார வினியோகத்தை கவனித்து கொண்டுள்ளது. கர்நாடகா முழுவதும் அமைக்கப்படும் ஏத்தர் எனர்ஜி சார்ஜர்களுக்கு இந்நிறுவனம்தான் மின்சாரத்தை வழங்கவுள்ளது.
கர்நாடகா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 1,000 ஃபாஸ்ட் சார்ஜர்கள் அமைக்கப்படவுள்ளன. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரும். எனவே கர்நாடக மாநிலத்தில் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை உயரவுள்ளது.
கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜர்களை அதிகளவில் நிறுவுவதற்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு போட்டியாக டிவிஎஸ் (ஐக்யூப்), பஜாஜ் (சேத்தக்), ஓலா எலெக்ட்ரிக் (எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ) உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.
இவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனங்கள் ஆகும். இதுதவிர இன்னும் பல்வேறு சிறிய நிறுவனங்களும் இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இங்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருவதால், வரும் காலங்களில் அந்த நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!