Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சாதா சைக்கிளை கொடுத்திட்டு இ-சைக்கிளை ஓட்டி போங்க! பிரபல நிறுவனம் அதிரடி! இந்த சலுகை எத்தனை நாளுக்கு தெரியுமா?
பிரபல மின்சார மிதிவண்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று சாதாரண சைக்கிளுக்கு எக்ஸ்சேஞ்ஜாக இ-மிதிவண்டியை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான கோஜீரோ மொபிலிட்டி (GoZero Mobility), புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு சிறப்பு திட்டம் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. 'சுவிட்ச்' (Switch) எனும் திட்டத்தையே அது அறிமுகம் செய்திருக்கின்றது.
இத்திட்டத்தின் அடிப்படையில் கோ-ஜீரோ நிறுவனம் வழக்கமான மிதிவண்டியை எக்ஸ்சேஞ்ஜ் வாயிலாக பெற்றுக் கொண்டு நிறுவனத்தின் புதிய இ-சைக்கிளை வழங்க இருக்கின்றது. வழக்கமான மிதிவண்டி (conventional bicycle) பயன்பாட்டில் இருந்து பேட்டரியால் இயங்கும் இ-சைக்கிள் பயன்பாட்டை நோக்கி ஈர்ப்பதே புதிய சுவிட்ச் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இதற்காகவே இந்த திட்டத்தை இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் கோஜீரோ மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. நிறுவனம், ரூ. 7 ஆயிரம் தொடங்கி ரூ. 25 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ஜிற்கு வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளது. மேலும், எந்த நிறுவனத்தின் மிதிவண்டியாக இருந்தாலும் நிறுவனம் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு கோஜீரோ நிறுவனம் தற்போது புதிய நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்திருக்கின்றது. எலெக்ட்ரிக் ஒன், சாரதி டிரேடர்ஸ், கிரீவ்ஸ் இவி ஆட்டோமார்ட் மற்றும் ஆர்யெந்த்ரா மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடனேயே நிறுவனம் கூட்டு சேர்ந்திருக்கின்றது.
புதிய சுவிட்ச் திட்டம் நாட்டின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த சலுகையானது தனது நிறுவனத்தின் அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சலுகை வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
இதற்கு பின்னர் சுவிட்ச் எக்ஸ்சேஞ்ஜ் திட்டம் விளக்கிக் கொள்ளப்படும் என கூறப்படுகின்றது. இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் கோஜீரோ நிறுவனத்தின் புதிய திட்டம் அமைந்துள்ளது.
தினசரி மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு உகந்தவையாக இ-சைக்கிள்கள் இருக்கின்றன. நகர்புறங்களின் அதிக வாகன நெரிசல் கொண்ட சாலைகளுக்கு உகந்த வாகனமாகவும் இவை இருக்கின்றன. இதன் விளைவாக நாட்டில் இ-சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனை கூடுதலாக உயர்த்த கோஜீரோவின் புதிய திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எக்ஸ்சேஞ்ஜ் திட்டம் குறித்து கோஜீரோ நிறுவனத்தின் இணை நிறுவனர் சுமித் ரஞ்சன் கூறியதாவது, "அதிகரித்து வரும் மின் வாகன தேவையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த பிரச்சாரம் நாட்டில் தொடங்கப்பட்டிருக்கின்றது" என்றார்.
மேலும், பேசிய அவர், "நுகர்வோர் எப்பொழுதும் வித்தியாசமாக இருக்க விரும்புகிறார்கள். மக்கள் பழங்காலத்திலிருந்தே வழக்கமான மிதிவண்டிகளை ஓட்டி வருகின்றனர். கோஜீரோ நிறுவனம் மிகவும் நவநாகரீகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட இ-பைக்கிகளை அத்தகையோருக்கு பரிசீலிக்கின்றது. எங்களின் எக்ஸ் சீரிஸ் இ-பைக்குகள் ஒரு மிதிவண்டி பயனரின் அனைத்து வழக்கமான மற்றும் ஆஃப்-ரோடு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது. அதே நேரத்தில் அவர்களுக்கு எலக்ட்ரிக் டிரைவ் டிரெய்னின் வசதியும் கிடைக்கும்" என்றார்.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!