Just In
- 1 hr ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 1 hr ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 4 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம்... எப்படி செயல்படுது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க!
நீங்க எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்க ஷோரூம் போயிருந்தா நிச்சயம் 'ஃபேம்-2' (FAME-II) என்ற வார்த்தை உங்கள் காதில் வந்து விழுந்திருக்கும். மத்திய அரசாங்கம் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தியதே இத்திட்டம். இதன் வாயிலாக மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.
நீங்க எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்க ஷோரூம் போயிருந்தா நிச்சயம் 'ஃபேம்-2' (FAME-II) என்ற வார்த்தை உங்கள் காதில் வந்து விழுந்திருக்கும். மத்திய அரசாங்கம் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தியதே இத்திட்டம். இதன் வாயிலாக மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.
உயரிய அளவில் காணப்படும் மின் வாகனத்தின் விலையை பெருமளவில் குறைப்பதே இத்-திட்டத்தின் முக்கிய பணியாகும். இதுமட்டுமின்றி இந்தியாவில் மின் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கவும் இத்திட்டம் உதவுகின்றது. இந்த சிறப்பு திட்டம் நாட்டில் எவ்வாறு செயல்படுகின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைத்து, சுற்று சூழலுக்கு நண்பனாக விளங்கும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டே ஃபேம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் முதல் முறையாக 2019ம் ஆண்டிலேயே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இந்த திட்டம், மின் வாகனங்களும் சென்ற ஆண்டே மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியது. இதன் விளைவு தற்போது நாட்டில் மின் வாகனங்களின் எண்ணிக்கை பன் மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. மேலும், எலெக்ட்ரிக் வாகன விற்பனையும் சூடுபிடித்துக் காணப்படுகின்றது.
முன்னதாக ஃபேம்-2 திட்டத்தின் வாயிலாக ஒரு கிலோவாட் (kWh) பேட்டரிக்கு ரூ. 10,000 மானியம் வழங்கப்பட்டது. தற்போது மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதனால் இந்த மானிய தொகையை ரூ. 15 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியிருக்கின்றது.
இதனால், மின்சார வாகனத்தின் விலை முன்பைக் காட்டிலும் பல மடங்கு தற்போது குறைந்திருக்கின்றது. உதாரணமாக ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கும் எனில், மேலும், அதன் விலை ரூ. 1 லட்சம் இருக்கும் எனில், ஒவ்வொரு கிலோவாட்டிற்கும் ரூ. 15 ஆயிரம் வீதம் மானியம் என வழங்கப்படும்.
இதன் விளைவாக ரூ. 45 ஆயிரம் வரை விலை குறையும். இந்த நிலை ஒரு லட்ச ரூபாய் என்ற விலையை 55 ஆயிரத்திற்கு குறைக்கும். இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களையும் மின் வாகனத்தை நுகர உதவும். இந்த காணரத்திற்காகவே மத்திய அரசு ஃபேம்-2 திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மத்திய அரசின் ஃபேம் 2 திட்டம் மட்டுமின்றி சில மாநில அரசுகளும் தங்களின் பங்காக மானிய திட்டத்தை தங்களின் மாநில மக்களுக்காக வழங்கி வருகின்றன. இதன் விளைவாக இன்னும் பல மடங்கு விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. குஜராத், டில்லி போன்ற மாநில அரசுகள் சில இதுபோன்று மானிய திட்டங்களை அறிவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய-மாநில அரசுகள் மானியம் மட்டுமின்றி வரி சலுகை மற்றும் பதிவு கட்டண சலுகை உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகின்றது. இது மக்களை கூடுதலாக மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் அதிக லாபத்தைக் கொடுக்கக் கூடியவையாக காட்சியளிக்கின்றன.
தற்போது பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் நாட்டில் மிக உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவை ரூ. 100ஐக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாகவும் (எரிபொருள் விலை பாரத்தைக் குறைக்கும் பொருட்டு) மக்கள் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!