Just In
- 24 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 3 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க
வேலூரில் சாலை போடுபவர்களால் புதைக்கப்பட்ட பைக்கை இப்போ இந்தியாவில் வாங்குவது என்பது இயலாத ஒன்று. இப்படியான ஓர் பைக்கையே அசால்டாக சாலைபோடுபவர்கள் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.
தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநிலத்தின் முக்கிய நகர்ப்பகுதிகளை வேற லெவலுக்கு மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. குறிப்பாக, இத்திட்டத்தின்கீழ் முக்கிய நகரங்களின் உள்-கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகளையே அரசு மேற்கொண்டு வருகின்றது. அதாவது, புதிய சாலைகள் அமைத்தல், மேம்பாலங்களை நிறுவுதல், மழை மற்றும் கழிவு நீர் வடி-கால்வாயை சீரமைத்தல் உள்ளிட்ட பன்முக பணிகளையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நகரங்களில் வேலூர் மாநகராட்சியும் ஒன்று. இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட மெயின் பஜார், காளிகாம்பாள் கோவில் தெருவிலேயே இதுவரை எந்தவொரு ரோடு போடும் கான்ட்ராக்டரும் செய்யாத ஓர் செயலை இந்த பகுதியில் சாலையை அமைத்து வரும் கான்ட்ராக்டர் செய்திருக்கின்றார்.
பொதுவாக ஏற்கனவே போடப்பட்டிருக்கும் சாலை மீதே புதிய சாலையை கான்ட்ராக்டர்கள் அமைப்பார்கள். குறிப்பிட்ட உயர அளவை கணக்கு காண்பிக்க இவ்வாறு அவர்கள் செய்வார்கள். ஆனால், வேலூரிலேயோ சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் வீல் புதையும் அளவிற்கு அந்த கான்ட்ராக்டர் சிமெண்ட் சாலையைப் போட்டிருக்கின்றார்.
பைக்கின் வீல் மட்டுமில்லைங்க, சாலையில் கொட்டிக் கிடந்த குப்பை, மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றையும் அகற்றாமல் அவர்கள் புதிய சாலையைப் போட்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே காளிகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்த சிவா என்பவரின் டூ-வீலரின் இரு வீல்களும் புதையும்படி அவர்கள் சாலையைப் போட்டிருக்கின்றனர்.
சாலை அமைக்கும் கன்ட்ராக்டரின் இந்த அடாவடி செயல்குறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் சிவா கூறியதாவது, "வழக்கம்போல் இருசக்கர வாகனத்தை இரவு எங்களது கடைக்கு முன் நிறுத்தி விட்டு சென்றிருந்தேன். காலை எழுந்து வந்து வெளியே பார்க்கும்போது சாலை முழுவதும் புதிதாக ரோடு போடப்பட்டிருந்தது. சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்னுடைய பைக்கையும் ஓர் கட்டாமல் அவர் சாலையைப் போட்டிருந்தார்கள்" என்றார்.
அதேநேரத்தில் சாலை போடுவதுகுறித்து தங்களுக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். சிமெண்ட் சாலை நன்கு இறுகியிருந்ததால் வாகனத்தை வெளியேற்றுவது பெரும் சவாலானதாக மாறியிருக்கின்றது. ஆகையால், புதிதாக போடப்பட்ட அந்த சாலையை உடைத்து பைக்கை அப்பகுதி மக்கள் மீட்டெடுத்திருக்கின்றனர்.
இந்த நிகழ்வு வேலூர் வாசிகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்திருக்கின்றது. வேலூர் நகராட்சியில் சாலை கான்ட்ராக்டரால் புதைக்கப்பட்ட இருசக்கர வாகனம் மஹிந்திரா சென்சூரோ ஆகும். இந்த பைக் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை.
ஆம், இவ்விருசக்கர வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றி ரொம்ப நாட்கள் ஆகின்றன. தற்போது நிறுவனம் மோஜோ பைக்கை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதுவும் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே அந்த பைக்கை விருப்பத்தின் பேரில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மஹிந்திரா சென்சூரோ பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதால் அப்பைக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்குக் குறைந்து காணப்படுகின்றது. ஆகையால், விரைவில் இந்த பைக்கின் தரிசனம் என்பது அறவே இல்லாத ஒன்றாக மாறும் சூழல் நிலவுகின்றது. இத்தகைய ஓர் பைக் மாடலையே சாலை போடுபவர்கள் அசால்டாக புதைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்த மலிவு விலை இருசக்கர வாகனத்தில் மஹிந்திரா சென்சூரோவும் ஒன்று. விற்பனைக்கு வந்த புதிதில் வெறும் மூன்றே வாரங்களில் 10 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்ற பைக் என்ற வரலாற்றைக் கொண்டதே இந்த மஹிந்திரா சென்சூரோ. 2013 ஜூலை 1ம் தேதி அன்றே இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பன்முக சிறப்பு வசதிகளுடன் இப்பைக் விற்பனைக்கு வந்ததால் இந்தியர்கள் பலர் இப்பைக்கிற்கு ஏகபோகமான வரவேற்பை வழங்கினர். ஆனால், நாளடைவில் புதிய வாகனங்களின் வருகையால் இந்த பைக்கிற்கான மவுசு குறையத் தொடங்கியது. தற்போது அது சந்தையை விட்டே வெளியேறியிருக்கின்றது. புனேவில் உள்ள ஆர்&டி மையத்தில் வைத்தே இப்பைக் உற்பத்தி செய்யப்பட்டது. ரூ. 45 ஆயிரம் என்ற மிக மிக குறைவான விலையில் இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
-
எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!