Just In
- 4 hrs ago
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- 5 hrs ago
பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!
- 7 hrs ago
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- 9 hrs ago
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
Don't Miss!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மீண்டும் கொடிகட்டி பறக்கும் ராயல் என்பீல்டின் 350சிசி பைக்குகள்! போட்டியாளர்களுக்கு போன மாசம் செம அடிபோல!
ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 நவம்பரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரத்து 766 யூனிட்டுகள் புதிய இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பெரும் பங்கு நிறுவனத்தின் 350 சிசி மோட்டார்சைக்கிள்களே விற்பனையாகியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டு, சென்ற நவம்பர் மாதத்தில் தங்களுக்கு என்ன மாதிரியான வரவேற்பு உள் மற்றும் வெளிநாட்டு சந்தையில் நிலவியது என்பது பற்றிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. புதிய மாதம் தொடங்கியதும் வாகன உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவராக முடிவுற்ற நவம்பர் மாத விற்பனை புள்ளி விபரங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அந்தவகையிலேயே, தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனமும் வாகன விற்பனை புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் 2022 நவம்பரில் கூடுதலாக 37 சதவீதம் அதிகமாக வாகனங்கள் விற்பனையாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் 2021 நவம்பரில் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் 51 ஆயிரத்து 654 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியநிலையில், 2022 நவம்பரில் அது 70 ஆயிரத்து 766 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் விற்பனை நிலவரம் இதுவாகும்.
உள்ளூரில் மட்டும் நிறுவனத்தின் தயாரிப்புகள் 65,760 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது 2021 நவம்பரைக் காட்டிலும் 47 சதவீதம் அதிகம் விற்பனை எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு நவம்பரில் 44,830 யூனிட் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனங்களே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. உள்ளூரில் ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் அதேவேளையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கின்றது.
சென்ற ஆண்டு நவம்பரில் ஏற்றுமதி செய்யப்பட்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 6,824 யூனிட்டுகளாக இருந்தநிலையில், அதன் எண்ணிக்கை 2022 நவம்பரில் 5,006 ஆக குறைந்துள்ளது. இது 27 சதவீதம் குறைவான ஏற்றுமதி விகிதம் ஆகும். இதனால் ஏற்பட்ட சோகத்தைத் தீர்க்கும் விதமாக உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு மிக சூப்பராக அதிகரித்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை மிகவும் ஸ்ட்ராங்கான வரவேற்பு ராயல் என்பீல்டின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கிடைக்கத் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதே ஆண்டு அக்டோபரிலும் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக அளவில் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது. 80 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளே 2022 அக்டோபரில் விற்பனையாகின. இந்த விற்பனை வளர்ச்சியே முடிவுற்ற நவம்பர் மாதத்திலும் தொடர்ந்திருக்கின்றது. இது அடுத்தடுத்த மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப நிறுவனம் இந்திய சந்தையில் புதுமுக டூ-வீலர்களை களமிறக்க ஆயத்தமாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 650 சிசி இருசக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தியது.
இதனை 2023 ஆம் ஆண்டின் ஜனவரியில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இப்போதே பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வாகனத்தை போலவே இன்னும் சில புதுமுக வாகனங்களைக் களமிறக்கும் பணியில் ராயல் என்பீல்டு மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. அந்தவகையில், 350 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி என அனைத்து பிரிவிலும் புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, விரைவில் ஜே சீரிஸ் பிளாட்பாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் புதிய தலைமுறை புல்லட் மற்றும் பாபர் ஸ்டைலில் உருவாகி வரும் புதிய 350 சிசி பைக் ஆகியவையே வெகு விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமில்லைங்க, ராயல் என்பீல்டு நிறுவனம் மின்சார இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக விரைவில் எலெக்ட்ரிக் பைக்கையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதற்காக நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஹிமாலயன் அட்வென்சர் பைக்கின் அடிப்படை தோற்றத்தில் ஓர் மின்சார டூ-வீலரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் வெளியாகிய தகவல்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. இந்த எலெக்ட்ரிக் பைக் அதிக தூரம் அட்வென்சர் பயணங்களை மேற்கொள்ள விரும்புவோர்க்கு ஏதுவாக உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், அதிக ரேஞ்ஜ் மற்றும் விரைவில் சார்ஜாகும் திறனுடனும் அது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
கனடாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை செல்லும் காரா இது!! மணப்பெண்ணின் ரியாக்ஷன் தான் ஹைலைட்டே...
-
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
-
சார்ஜ் போடாமல் வெறும் சூரிய வெளிச்சத்திலேயே காரை இயக்க முடியுமா? இரவு நேரம் இது எப்படி இயங்கும்?